31.7.07

குமரிமைந்தனின் கட்டுரைகள் பற்றி புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வு

NEW CENTURY BOOK HOUSE PRIVATE LTD.,
PUBLICATION UNIT,
6, NALLATHAMBI STREET,
ANNA SALAI, MADRAS - 600 002.

நாள்:19-4-1995.

அன்புடையீர்,

தங்களின் 11-04-95 தேதியிட்ட கடிதம் கிடைத்தது.

தங்கள் கட்டுரைத் தொகுப்பை எமது ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில் அவர்களின் கருத்துரை திருப்திகரமாக இல்லாததினால் தங்களின் ஸ்கிரிப்டை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளோம்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

இங்ஙனம்,

திருமதி. மீனாட்சி,
செயல் அலுவலர்
நூல் வெளியீட்டுத்துறை

இணைப்பு: மேற்கண்டவாறு.



திறனாய்வுகள்


குமரிமைந்தன் - இவர் யார் என்று தெரியவில்லை.

1. வீட்டைக் கட்டிப்பார்

′வங்கிக் கடன்களால் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்′ என்று கூறுகிறார். இதை நடைமுறை உண்மை என்று வலியுறுத்துகிறார். இந்தத் தகவலை எங்குப் பெற்றார் என்று தெரியவில்லை. இது கடும் குற்றச்சாட்டு. வங்கிக்கடன்களால் பயன் பெறுவோர் அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான். அனைந்திந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்திய முதலாளிகள் எவ்வாறு வங்கி மூலதனத்தைக் கபளீகரம் செய்துவருகிறார்கள் எவ்வாறு பல வங்கிகள் மூடப்படும் நிலையில் உள்ளன என்று விளக்கமான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் நடைமுறையைப் பரிசீலித்த நரசிம்மம் குழு கூட இத்தகைய கடுமையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசியதில்லை. இக்கட்டுரை தினமணியில் 21.10.93ல் வெளிவந்ததாகவும் கூறுகிறார்.

2. வருமானவரி தேவையா?

எல்லா நாடுகளிலும் வருமானவரி அங்கீகரிக்கப்பட்ட வரி. ஆனால் வருமான வரி இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் வழி தீமையானது. நாட்டு முன்னேற்றத்திற்கும் ஏழைமக்களின் நல்வாழ்வுக்கும் வருமானம் பெறுவோர் பங்களிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுந்த வரி வருமானவரி. ஆசிரியர் வருமானவரியையே நீக்க வேண்டும் என்று வாதிக்கிறார். கொள்ளையடிக்கும் முதலாளிகளுடைய வாதம் வரியை நீக்கிவிட்டால் கறுப்புப்பணம் வெள்ளைப் பணமாகிவிடும் என்பது. ஆசிரியருடைய வாதமும் இதுவே.

3. அந்த ஆறடி நிலம் யாருக்கு?

இது வீடுகட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளை விவரிக்கிறது. ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது புரியவில்லை.

4. நிலவுடைமைக் குளறுபடிகள்.

தமிழகத்தில் இருந்த நில உரிமைகளை உறவுகளை எடுத்துக் காட்டுகிறார். உழுபவனுக்கே நிலம். நில உச்சவரம்பு என்னும் இரண்டு கோரிக்கைகளையும் நகையாடிச் சாடுகிறார். இதிலிருந்து இவர் நிலப்பிரச்சினையைச் சரியான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை என்பது தெரிகிறது. அவர் அளிக்கும் ஆலோசனைகளில், 1) வருவாய்த் துறைக்கு வரிதண்டுவது தவிர நிலவுடைமையில் எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பது. இது ஏறத்தாழ உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை மறைமுகமாகத் தாக்குவது எனலாம். 2) நில உச்சவரம்பு நிலம் முடமாக்குவதற்குப் பயன்படுகிறது. எனவே நில உச்ச வரம்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆலோசனைகள் பொதுவாக நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக உள்ளது காணலாம்.

5) பாசனம்.

இது ஒரு நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது.

6) ஒதுக்கீடும் ஏழ்மையும்.

இக்கட்டுரைத் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் ஆடம் ஸ்மித்தின் பொருளியல் கோட்பாடுகளையும் சோஷலிசத்தையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். நிலவுடைமை, தொழில் உடைமை (Landlordism, Capitalism) நாட்டுக்கு நலம் பயக்கும் என்று கூறுகிறார்.

7) பாலைத்திணை விடு(வி)க்கும் புதிர்கள்.

இது நல்ல தரமான கட்டுரை. ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

8) தைப் பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்.

பண்டைய தமிழகத்தில் வழக்கத்திலிருந்த வான நூல் பற்றிய ஆய்வுக் கட்டுரை இது. நல்ல முயற்சி. அரிய கருத்துக்கள் கொண்டது.

இதிலிருந்து பாசனம் என்ற கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகள் 2ம் தவிர மற்றவை என்.சி.பி.எச் ஆல் வெளியிடத்தக்கவையல்ல என்பது என் கருத்து.

- ஆசிரியர் குழு.

தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்

தைப் பொங்கல் தமிழர்களின் பண்பாட்டின் மிகப் பழமையானதொரு திருநாளாகும். இத்திருநாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் இது சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலுக்கு முந்திய நாளில் கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தித் திருநாளுக்கு கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதி நாள் என்றும் தைப்பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கமென்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. உண்மையில் சங்கராந்தி, தைப்பொங்கல் எனப்படும் நாட்கள் முறையே கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதியிலும் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலும் தான் வருகின்றனவா?

இல்லை. கதிரவன் தன் செலவின் தென் கோடியில் திசம்பர் 20 ஆம் நாள் இருக்கிறது. வட கோடியில் சூன் 20-ஆம் நாளில் இருக்கிறது. மார்ச்சு 21,செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் நிலநடுக்கோட்டில் வருகின்றது. அப்படி இருக்கும்போது சங்கராந்தி, தைப் பொங்கல் என்பவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

உலகில் முகாமையாக மூவகை ஆண்டுமுறைகள் நிலவுகின்றன. அவை மதியாண்டு, கதிராண்டு, மதிகதிராண்டு எனப்படும். அவற்றில் முகம்மதியர்களின் ஆண்டு தூய மதியாண்டு. ஆங்கில ஆண்டு எனப்படும் கிரிகோரியன் ஆண்டைப் பொதுவாக கதிராண்டு எனக் குறிப்பிடலாமாயினும் கதிரவனின் திருப்புமுனை இயக்கங்களோடு அதற்குரிய இயைபு முறிந்துவிட்டது. இந்தியாவிலுள்ள சாலிவாகன ஆண்டு தூய கதிராண்டு. சோதிடத்திற்குப் பயன்படும் சூரியவட்டமும்(Zodiac) இதுவும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளன. உலகிலுள்ள பிறவனைத்து ஆண்டு முறைகளும் மதிகதிராண்டுகள் தாம்.

உலகில் மனிதன் இரவு பகல் என்ற காலக் கணக்குக்கு அடுத்தபடியாக அறிந்த காலக் கணிப்பு நிலவின் வளர்வு, தேய்வு என்ற இயற்பாட்டைத் தான். நிலவு இருளில் தோன்றும் ஒளிவிளக்கு என்பதாலும் அதனைக் கண்ணால் எளிதில் நோட்டமிட முடிந்ததாலும் இது நிகழ்ந்தது. முன் இவ்வாறு நிலவின் ஒரு துடிப்பு அதாவது காருவா எனும் அமாவாசையிலிருந்து வெள்ளுவா எனும் பவுர்ணமிக்கு மாறி மீண்டும் காருவாவுக்கு வரும் காலம் ஓராண்டு என்று கணக்கு வைக்கப்பட்டது. இவ்வாறு இன்றைய ஓராண்டுக்கு முன்பு ஏறக்குறைய 12 ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. கிறித்துவ மறைநூலில் ஆதாம் போன்ற தொடக்க கால மனிதர்களுக்குத் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்ட அகவை குறிப்பிடப்பட்டிருப்பது இதனால் தான்.

அடுத்த கட்டமாக பன்னிரண்டு நிலா மாதங்களைக் கொண்ட மதியாண்டு நிறுவப்பட்டது. வானில் இரவில் நிலவுக்குப் பின்னணியில் எண்ணற்ற விண்மீன் கூட்டங்கள்[1] உள்ளன. புவி கதிரவனைச் சுற்றிவரும் தன் போக்கில் ஒரு வெள்ளுவாவின்போது நிலவின் பின்னணியிலிருக்கும் வீண்மீன் கூட்டம் அடுத்த வெள்ளுவாவின் போது இருப்பதில்லை. அதுபோன்ற 12 வெள்ளுவாக்களின் பின்னர் தான் ஏறக்குறைய பழைய விண்மீன் கூட்டம் பின்னணியில் தோன்றும். இவ்வாறு 12 மதிமாதங்கள் கொண்ட நிலவாண்டுகள் உருவாயின. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகள் முடியும்போது நிலவு முன்பிருந்ததற்கு முந்திய விண்மீன் கூட்டத்தின் எல்லைக்குள் தான் வந்திருக்கும். இதைச் சரி செய்வதற்கு இந்த ஒரு மாதம் பொய் மாதம் எனக் குறைக்கப்பட்டது. இன்றைய சுமார்ந்த ஆண்டு எனப்படும் தெலுங்கு ஆண்டு இந்த வகையினதே. இவ்வாறு அது மதிகதிராண்டாக மாற்றப்பட்டுவிட்டது.

தமிழ் ஆண்டு நேரடியாகவே கதிராண்டாகக் கணக்கிடப்படுகிறது. புவி கதிரவனைச் சுற்றும்போது அதனோடு உள்ள தன் அச்சின் சாய்வினால் கதிரவன் வடக்கும் தெற்கும் நகர்வதான தோற்றம் ஏற்படும். இந்தத் தோற்றத்தின் அடிப்படையில் புவியின் ஒருசுற்று ஓராண்டாகக் கணக்கிடப்பட்டது. அதே வேளையில் நிலவின் இருப்பிடத்தை வைத்தே மாதங்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. சித்திரை நாண்மீனைக் கொண்ட விண்மீன் கூட்டத்தில் நிலவு வரும் மாதம் சித்திரை என்றும் விசாக நாண்மீனைக் கொண்ட கூட்டத்தில் நிலவு வரும் மாதத்தை வைகாசி என்றும் அழைத்தார்கள்.

இதே ஆண்டின் மாதங்களுக்கு கேரளத்தில் அவ்வம்மாதத்தில் கதிரவன் இருக்கும் ஓரைகளின் (ராசிகளின்) பெயர்கள் இடப்பட்டுள்ளன. வெள்ளுவாவன்று நிலவு இருக்கும் ஓரைக்கு நேர் எதிர் ஓரையில் கதிரவன் இருக்கும்.

இதுதவிர விண்வெளியில் கதிரவனின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட விண்மீண் இருக்கும் வகையில் மீண்டும் வரும் கால இடைவெளியை ஆண்டாகக் கொள்ளும் ஆண்டு முறையும் உள்ளது. இதற்கும் புவியின் ஒரு சுற்றைக் கொண்ட ஆண்டுக்கும் மிகச் சிறிய வேறுபாடு உண்டு.

பண்டைக் கிரேக்கத்தில் 8 மதியாண்டுகளை எடுத்துக் கொண்டு அதை நான்கு நான்காண்டுகாகப் பிரித்து அடுத்தடுத்த நான்காண்டுகளுக்கு முறையே இரண்டும் மூன்றும் மாதங்களைத் தள்ளிக் கணக்கிட்டு மதியாண்டுகளைக் கதிராண்டுகளுடன் இணைத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றின.

யூதர்கள் மதியாண்டுகளின் தொகுதியில் சில ஆண்டுகளுக்கு 13 மாதங்களை வைத்து பத்தொன்பது கதிராண்டுகளில் அவற்றை இணைத்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கதிரவன் வான மண்டலத்தில் வடக்கு தெற்காக நகரும் தோற்றத்தை வைத்தே ஆண்டுகளைக் கணக்கிட்டுள்ளனர். இப்போது நடப்பிலிருக்கும் சித்திரை மாதத்தில் வரும் ஆண்டுப் பிறப்பு கதிரவன் நில நடுக்கோட்டுக்கு மேலே வரும் நாளைக் குறிக்கின்றது. இது தைப் பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவில் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்பட்ட ஓர் ஆண்டுப் பிறப்பின் தடயம். அதுபோன்று ஆடிப்பிறப்பும் கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்பட்ட ஓர் ஆண்டுப் பிறப்பின் தடயம்.

இவற்றில் தைப் பிறப்பு நமக்குச் சில கேள்விகளை எழுப்புகிறது. கதிரவனின் வடக்குச் செலவின் தொடக்கம் நிகழ்வது உண்மையில் திசம்பர் 21இல் தான். ஆனால் அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு சனவரி 14 ஆம் நாளில் கொண்டாடுகிறோம். இது ஏன்?

இதற்காக விளக்கத்தை நம் நாட்டுக் கணியர்கள்(சோதிடர்கள்) சிலரிடம் கேட்டபோது அவர்களில் கல்லூரிப் படிப்புப் படித்தவர்கள்கூட கணியத்தின் வானியல் அடிப்படை பற்றிய சிந்தனையே இல்லாமலிருக்கிறார்கள். கணியத்தில் ஓரைகளைக் காட்டும் கட்டங்களைத்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதேயொழிய புவியை நடுவில் வைத்து அதிலிருந்து வட்ட வடிவில் ஓரைச் சக்கரம்போட்டு விளக்கினால் அவர்களுக்குப் புரியவே இல்லை.

திசம்பர் 21க்கும் சனவரி 14க்கும் இடையிலுள்ள 24 நாட்கள் இடைவெளிக்கு அவர்களால் கூற முடிந்த காரணம் வட்டத்திலிருக்கும் பாகைகள் 360; ஆனால் ஆண்டிலுள்ள நாட்கள் 365. ஒரு நாளைக்கு ஒரு பாகை என்ற கணக்கில் பார்த்த நம் முன்னோர்கள் ஆண்டுக்கு ஐந்து நாட்கள் பிழைவிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். இப்போது வெள்ளையர்களின் காலக் கணிப்பை நாம் அப்படியே எடுத்துக் கொள்வதனால் அந்த வேறுபாடு கூடாமல் அப்படியே நின்று போய்விட்டது என்பதாகும்.

ஆனால் உண்மைநிலை என்னவென்றால் பஞ்சாங்கங்களில் திசம்பர் 21 மகர அயனம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகரம் என்பது மலையாள வழக்கில் தை மாதத்தைக் குறிப்பதாகும். எனவே கதிரவனின் வடக்குச் செலவு தெற்குச் செலவுகளின் கணிப்பில் தம் முன்னோர்கள் தவறு ஏதும் செய்யவில்லை. இந்தத் தவற்றுக்கு வேறு ஏதோவொரு காரணம் இருக்கிறது. அது என்ன?

பண்டை வரலாற்றில் ஒரு கட்டத்தில் தமிழர்கள் குமரிக் கண்டத்தில் மகரக் கோடு எனப்படும் 23½ பாகை தெற்கு அக்கக் கோட்டிற்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும். இப்போது மகரக் கோட்டில் கதிரவன் வரும்போது (இன்றைய நிலையில் திசம்பர்21) ஆண்டுப் பிறப்பை வைத்திருக்க வேண்டும். பின்னர் காலஞ் செல்லச் செல்ல அறிவியல் வளர வளர நிலநடுக்கோட்டின் தன்மையைப் பற்றிப் புரிந்திருப்பார்கள். அதேவேளையில் தெற்கே கடற்கோள்களினால் மக்கள் வடக்கு நோக்கி, அதாவது நிலநடுக்கோடு நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

நிலநடுக்கோட்டின் இயல்பு என்னவென்றால் நிலநடுக்கோட்டில் கதிரவன் இருக்கும் நாட்களில் உலகெங்கும் இரவும் பகலும் சமமாக இருக்கும். அதுபோல் கதிரவன் எந்த நிலையில் இருந்தாலும் நிலநடுக்கோட்டில் மட்டும் என்றுமே இரவும் பகலும் சமமாக இருக்கும். இத்தன்மைகளினால் நிலநடுக்கோட்டில் அமைவதாக ஒரு தலைநகரை அவர்கள் அமைந்திருக்க வேண்டும். அதுவே தென்மதுரையாக இருக்க வேண்டும்.

உலகத் திணைப்படத்தைப் பார்த்தால் நன்மதுரை அல்லது மூலமதுரை எனப் பொருள்படும் சுமத்ரா தீவின் வழியாகத் தான் நிலநடுக்கோடு செல்கிறது.

குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி முழுகியது. இதுவே தமிழிலக்கியங்களில் முதற் கடற்கோள் என அழைக்கப்படுகிறது. மக்கள் வடக்கு நோக்கி ஓடினர். புதிதாக ஓரிடத்தில் தங்கள் தலைநகரை அமைத்தனர். அதுதான் கபாடபுரம் எனப்படும் கதவபுரம். இடம் மாறினாலும் கதிரவன் அந்த இடத்துக்கு நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடும் மரபை மாற்றவில்லை. இதனால் உண்மையாக நிலநடுக்கோட்டுக்கு கதிரவன் வரும் நாளுக்குப் பகரம் தங்கள் புதிய தலைநகருக்கு நேராக வரும் நாளைப் புதிய ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இதனால் 24 நாட்கள் ஆண்டுப் பிறப்பு தள்ளிப் போனது. அதன் விளைவாக தை மாதப் பிறப்பும் 24 நாட்கள் தள்ளிப் போனது. இந்தத் தலைநகரம் ஏறக்குறைய 5ஆம் வடக்குப் பாகையில் இருந்தது. அதாவது இன்றைய இலங்கையின் தென் கோடியிலிருக்கும் காலே நகருக்கு நேரே ஓரிடத்தில் இருந்தது.

இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் இன்னொரு தலைநகர் மாற்றம். அது மணலூர். மணலூர் என்பது கொற்கையை ஒட்டிய ஓர் ஊர். இவ்வூரைப் பற்றிய செய்தி தமிழ்ச் சங்கங்களைப் பற்றிக் கூறும் தமிழ் இலக்கியங்களில் பதிவாகவில்லை. மாறாக மகாபாரதத்தில் பதிவாகியுள்ளது. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது மணலூரில் ஆட்சி செய்த சித்திராங்கதன் என்ற பாண்டிய மன்னனின் மகளான சித்திராங்கதை என்ற பெண்ணை மணந்தான் என்று கூறுகிறது.

இந்த ஊரில் பாண்டியனின் தலைநகர் இருந்ததற்கு இன்னொரு சான்று சித்திரை பத்தாம் நாள். ஏறக்குறைய ஏப்பிரல் 23. இந்த நாளில் கதிரவன் கொற்கைக்கு நேராக வருகிறது. கொற்கையின் பாகை 8.

இறுதியாகப் பாண்டியர்கள் மதுரைக்குக் குடிபெயர்ந்தார்கள். கடலினால் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளின் விளைவாக அவர்கள் தங்கள் தலைநகரை உள்நாட்டினுள் மாற்றிக்கொண்டனர். ஆனால் கடற்படை, கடல் வாணிகம் ஆகியவற்றின் இன்றியமையாமையை அவர்கள் மிகப் பழங்காலத்திலேயே பயன்படுத்தி உலகப் பேரரசு கண்டு உயர்ந்தவர்கள். எனவே பட்டத்து இளவரசனைக் கொற்கையிலேயே அமர்த்தினர்.

இப்போது மதுரையில் தலைநகரம் அமைத்ததைக் காட்டும் காலக் கணிப்பு மாற்றங்களெதையும் நிறுவவில்லை. ஆனால் அதேவேளையில் அந்நகருக்கு நேர் மேலே கதிரவன் வரும் நாளின் பெருமையை அவர்கள் மறக்கவிலலை. நெடுநல்வாடையில் மதுரை அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள இரு கோல்களில் நிழல்களும் ஒரே நேர்கோட்டில் விழும் நாளில் அந்த அரண்மனைக்குக் கால்கோள் நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது. கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்.

விரிகதிர பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறி நிலை வழுக்காது குடக்கேர்பு
ஒரு திறஞ் சாரா அரைநா ளமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிதிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெருமபெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

இவ்வரிகளே பாண்டியர்கள் ஆண்டுப் பிறப்புக்குக் கதிரவன் தலைநகருக்கு மேலே வரும் நாளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நம் உய்த்துணர்வுக்கு அடிப்படை. தைப் பொங்கலில் ஏற்படும் 24 நாட்கள் வேறுபாடும் சித்திரைப் பத்தும் நெடுநெல்வாடையில் வரிகளும் இந்த நம் முடிவுக்கு அடிப்படையாக அமைகின்றன.

இவ்வாறு குமரிக் கண்ட ஆய்வுக்கு ஏராளமான சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பெற முடியும். முயன்று தேடுவோம்.

அடிக்குறிப்பு:

[1]ராசிகளென்றும் நட்சத்திரங்களென்றும் அழைக்கப்படுபவை உண்மையில் விண்மீன்களின் கூட்டங்களே. ராசிகளுக்கு ஓரைகளென்பதும் நட்சத்திரங்களுக்கு (நாள்+சத்திரம்?) நாண்மீன்களென்பதும் தூய தமிழ்ச் சொற்கள். ஓரை என்றசொல் Hora என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே வந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஓரை என்பதற்குக் கூட்டம் என்பது ஒரு பொருள். கிரேக்கத்தில் வேளை என்ற பொருள் மட்டுமே. ஆங்கிலத்தில் விண்மீன் கூட்டங்களை Constellation என்றே கூறுகின்றனர். இதுபோன்ற பொருள் கிரேக்கச் சொல்லுக்குக் கிடையாது. எனவே ஓரை என்ற சொல்லிலிருந்தே கிரேக்கச் சொல் பிறந்துள்ளது உறுதி.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...4

முரண்பாடுகள்:

தொல்காப்பியம்தான் பொருளிலக்கணத்தை முழுமையான வடிவில் தமக்கு அளிக்கும் ஒரே நூல். நாம் மேலே கொண்‌டிருக்கும் முடிவுகளுக்கு முரண்பட்ட செய்திகளை அது தன்னுள் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. ஆனால் பாலைத்திணை எனும் புதிரை விடுவிக்கும்போது இருவேறு நிலப்பரப்புகளில் இருவேறு காலங்களில் இருவேறு சூழ்நி‌லைகளில் வாழ்ந்த மக்களிடையில் தோன்றிய பண்பாட்டுக் கோட்பாடுகள் ஒன்றன்மீதொன்று இந்நூலி‌ல் படிந்திருப்பதைப் பாலைத் திணை சுட்டி நிற்கிறது. ஒருவகை கோட்பாட்டை உருவாக்கிய மக்கள் தாம் வாழ்ந்த பகுதி அழிந்துவிடவே புதிய இடத்தில் குடியேறி உருக்குலைந்துவிட்ட தம் வாழ்வை மீட்பதில் ஒரளவு வெற்றிபெற்ற நிலையில் உருவான புதிய கோட்பாடு‌களைக் கொண்டு ‌பழைய கோட்பாடுகளை ‌மீட்டெழுதிய முயற்சியே தொல்காப்பியம் என்பதை பாலைத் திணை சுட்டி நிற்கிறது. இந்த இரண்டு அடுக்குகளிலிருந்தும் முதன் முதலில் தோன்றிய கோட்பாடு வரிசையை மீட்டமைக்கும் முயற்சியின் விளைவே மேலே தரப்பட்டிருக்கும் முடிவுகள்.

பொருளிலக்கணம், மாந்நநூல், குமுகவியல்:

இன்றைய மாந்த அறிவியலான மாந்தநூல் பொருளிலக்கணம் கையாண்டுள்ள அதே பொருட்களையே கையாள்கிறது. அவை,

1. பருப்பொருள் பின்புலம் - நிலமுமம் கால நிலையும்
2. சமயமும் நம்பிக்கைகளும்
3. உணவு
4. தொழில் நுட்பம்
5. நிகழ்த்து கலைகளும், நுண்கலைகளும் (கலை, இலக்கியம்)
6. குடும்பம்
7. குமுகியல் அமைப்பு
8. அரசியல்
9. மொழி

இவ‌ற்றையே பொருளிலக்கணத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை.

மாந்தநூல் எழுத்தறிவு பெறா மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை. எழுத்தறிவு பெற்ற மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை குமுகவியல் (சோசியலாஜி) எனப்படும். பொருளிலக்கணம் காட்டும் குமரிக் கண்ட‌த்தில் வாணிகப் பெருக்கமும் அரசியல் வளர்ச்சியும் எழுத்தறிவையும் இலக்கிய மேன்மையையு‌ம் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்குப் பொருளிலக்கணமே சான்று. ஒருவேளை குறிஞ்சி நில மக்கள் எழுத்தறிவை எய்தாமலிருந்திருக்கலாம். நெய்தலில் மிக உயர்ந்த் இலக்கிய வளர்ச்சியும் குறிஞ்சியில் மிக எளிமையான இலக்கியமும் அமைந்திருக்கலாம். அந்த வகையில் பொருளிலக்கணம் மாந்நூல் கலந்த குமுகவியல் நூல் என்பதே பொருந்தும்.

பொருளிலக்கணத்தின் நோக்கம்:

ஒரு ‌குமுகம் இன்னொரு குமுகத்தை அடக்கியாள்வதற்காகத் தான் அடக்க நினைக்கும் அல்லது அடக்கி வைத்திருக்கும் குமுகத்தின் பண்பா‌ட்டுக் கூறுகளை முழுமையாக அறிந்து கொள்ள முயல்கிறது. இவ்வாறுதான் எரோடோட்டசு முதல் எட்கார் தர்சுட்டன் வரையும் இன்று வல்லரசுகளின் பல்வேறு நிறுவனங்களும் பிற மக்களின் வரலாற்றையும் பண்பா‌ட்டுக் கூறுகளையும் ஆய்ந்து வந்திருக்கின்றனர். அதேபோல் குறிஞ்சி தொடங்கி நெய்தல் வரை தங்க‌ள் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த நெய்தலின் ஆட்சியாளர்களின் முயற்சியால் உருவானதே பொருளிலக்கணம். இப்போது தமிழ்க் கழகம்(சங்கம்) தோன்றுவதற்கான தேவையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பொருளிலக்கணம் காட்டும் குமுக வளர்ச்சி நிலை:

பொருளிலக்கணம் வெறும் மொழியிலக்கணமல்ல. மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பெரும் அறிவியல் சாறு அது. அதன் பல்வேறு சிதறல்களைத் தொல்காப்பியத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நம்மால் காண முடிகிறது. இதிலும் குறிப்பாகத்

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்......

என்று மனிதனி‌ன் தனித்தன்மையை வளர்த்தலைப் பிரித்துக் காட்டுவது உயர்ந்த ஒரு குமுகவியல் ஆய்வுத் துறையின் வளர்ச்சியையும் அதனோடு இணைந்து நடைபோட்ட பல்துறை வளர்ச்சியையும் நமக்குக் காட்டுகிறது. இதுவும் பாலைத்திணைக்கு உரியதே. இந்த வகையில் பாலைத் திணை தொல்காப்பியத்‌தின் எந்தக் கூறையும் புரிந்த கொள்ள உதவுவதால் தொல்காப்பியத்தைப் "பாலையியல்" என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று தோன்றுகிறது.

மனிதக் குழுக்கள் முதலில் தத்தம் மூதாதையரான ஒவ்வொரு பெண்ணின் பெயரில் அமைந்த வெவ்வேறு கூட்டங்களாக மலை முகடுகளிலிருந்து கடலோரம் வரை வாழ்ந்து வந்தனர். தங்கள் மூதாதையர் பெயரிலமைந்த இந்தக் கூட்டங்களுக்கு அம்மூதாதையரே தெய்வம். அத்தெய்வப் பூசாரியரே அவர்களின் தலைவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தத்தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களோடு தடங்கலின்றி பாலுறவு கொண்டு வந்தனர். தம் கூட்டத்தினர் ஒருவரின் இரத்தத்தைச் சிந்தும் வெளியார் எவரையும் பழி வாங்குதல் ஒவ்வொருவருரின் கடமையாகும். இத்தகைய மக்கட் கூட்டங்கள் மூலக்குடிகள் அல்லது குக்குலங்கள் எனப்படும்.

ஆனால் நாளடையில் மலையிலிருந்து கடல்வரையில் வாழ்ந்த இந்த மக்களிடையில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புகளுக்கேற்பப் பொருளியல் வேறுபாடுகளும் அதனடிப்படையில் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் வேறுபாடுக‌ளும் தோன்றின. ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த பிற கூட்டத்து மக்களிடமிருந்து தம் பண்பாடு வேறுபடுவதைவிட பிற பகுதியில் வாழ்ந்த தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகமாக மாறுவதை அவர்கள் கண்டனர். எனவே பழைய குக்குல உறவுகள் உடைபட்டு நிலஞ்சார்ந்த உறவுகள் வலுப்பெற்றன. பழைய குக்குலத் தெய்வங்களின் வழிபாடும் பூசாரித் தலைவர்களும் செல்வாக்கிழந்தனர். அவ்வாறு தான் தாய்த் தெய்வங்களுக்குப் பகரம் வருணன், இந்திரன், மாயோன், சேயோன் போன்ற தெய்வங்கள் தோன்றின. ஆனால் இந்த நானிலங்களிலுமிருந்து பிரிந்து பாலையில் ஒதுங்கிய மக்கள் மட்டும் தம் குக்குலத் தெய்வங்களின் எச்சமான ஐயை என்ற தாய்த் தெய்வத்தை வழிபட்டனர்.

இவ்வாறு குமரிக் கண்டத்தில் தோன்றிய பல்வேறு குக்குல மக்கள் தங்களிடையில் வளர்ச்சி ஏற்படுத்திய வேற்றுமைகளின் விளைவாக நிலத்தால் பிரிந்தும் அதே காரணத்தால் தோன்றிய ஒற்றுமையால் நிலத்தால் இணைந்தும் நாகரிகத்தில் ஓர் உயர்ந்த மட்டத்தை எய்திய ஒரு கட்டத்தைப் பொருளிலக்கணம் காட்டுகிறது. இதில் பாலைநிலம் ஒரு நடுவான இடத்தை நிலத்தில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் பெறுகிறது.

அ‌ன்றும் இன்றும்:

மேலே குறிப்பிட்டுள்ளவாறு குமரிக் கண்டத்தில் உயர்நிலை எய்திய நாகரிகம் நிலவியது என்ற தமது கருத்து கற்பனையானதாகவும் தற்பெருமை கூறுவதாகவும் தோன்றுவது இயல்பு. ஏனென்றால் அத்தகைய ஒரு வளர்ச்சி நிலையில் நம் மு‌‌ன்னோர்கள் இருந்திருப்பார்களென்பதை இன்று நாமே நம்ப முடியாத அளவுக்கு நம் நிலை தாழ்ந்திருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள முடிவுகளை எய்த ஐரோப்பிய நாகரிகம் இன்று வளர்த்தெடுத்திருக்கும் அறிவியல்களின் துணை வேண்டியிருக்கிறது. அவ்வறிவியலின் முடிவுகளே நமது தொல் நாகரிகச் சிறப்பின் உயர்வை அளந்து காண உதவும் கருவியாகவும் அளவுகோலாகவும் ஆகுமளவுக்கு நாம் பின்னடைந்து விட்டோம். பின்னடைவு என்பது இங்கு பின் தங்குதலைக் குறிப்பிடவில்லை, பின் வாங்குதலை, பின்நோக்கிச் சென்றதைக் குறிக்கிறது.

மார்க்சின் தோழர் ஏங்கல்சு தான் எழுதிய குடும்பம், த‌னிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் அரசு தோன்றுவதற்கு முதற்படியாக மக்கள் குக்குலங்களாகப் பிரிந்‌திருப்பதிலிருந்து நிலத்தினடிப்படையில் பிரியத் தொடங்குகின்றனர் என்று கூறுகிறார்.


தொல்காப்பியத்தின் மூலம் நாம் காணும் பொருளிலக்கணமும் அப்பொருளிலக்கணத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற அறிவியற் துறைகளின் செறிவும் இப்பல்வேறு துறைகள் தத்தமக்குரிய நூல்களைக் கொண்டு விளங்கியமையைக் கா‌ட்கிறது. இவற்றைச் சுட்டிக்கா‌ட்டுவதன் நோக்கம் தற்பெருமை பேசுவதற்கோ தருக்கித் திரிவதற்கோ அல்ல. நம் முன்னோர் எய்தி‌யுள்ள இம்மேன்மையை எய்தும் திறன் நமக்குண்டு என்ற தன்னம்பிக்கையையும், அத்தகைய உயர்நிலையை மீண்டும் எய்த வேண்டும் என்ற ஊக்கத்தையும் நாம் பெற வேண்‌டும் என்பதற்காகத் தான். வரலாறு என்பது ஓர் உரிமை முறி ம‌ட்டுமல்ல போர்க்கருவியுமாகும். அதனை இன்னும் கூராக்குவோம்.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...3

ஐந்திணைகளுக்கும் உரிய வாழ்க்கை முறைகள்:

மாந்தநூல் எனப்படுவது பழங்குடிகள் அல்லது ‌மூலக்குடி மக்களின் எழுத்தறிவுக்கு முந்திய வாழ்க்கை முறைகளை ஆயும் துறையாகும். மூலக்கு‌டிகள் மணவுறவில் அகமணக் குழுக்கள், புறமணக் குழுக்கள் என்ற பிரிவுகளைக் கொண்டவை. ஒவ்வொரு மூலக்குடியும் ஒரு அகமணக் குழுவாகும். அகமணக் குழு என்பது தமக்கு வெளியே மணவுறவு தடை செய்யப்பட்ட மக்கள் தொகுதியாகும். அவ்வகையில் இன்றைய சாதி ஒவ்வொன்றும் ஓர் அகமணக் குழுவாகும். ஆனால் இந்த அகமணக் குழு சிறு பிரிவுகளாகப் பிரிந்து புறமணக் குழுக்களாகின்றன. இந்தக் குழு‌க்கள் ஒவ்வொன்றின் உறுப்பி‌னரும் தமக்குள் மணவுறவு கொள்வதில்லை. தமக்கு வெளியிலுள்ள இன்னொரு பிரிவின் உறுப்பினர்களோடு தான் உறவு கொள்வர்.

குறிஞ்சித் திணை:

ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதி தொடக்க நிலையில் மனிதர்களிடையில் இருந்ததில்லை. ஒரு புறமணக் குழுவின் உறுப்‌பினர்கள் தமக்கு மணமுறையுள்ள இன்னொரு புறமணக் குழுவின் எதிர்பால் உறுப்பினரனைவருடனும் கட்டுப்பாடற்ற உறவு கொள்ளும் நிலை ஒரு கட்டத்தில் இருந்தது. திருமணம் என்ற ′′கரணம்′′ தோன்றுமுன் இவ்வாறு புணர்ந்த இருவர் சேர்ந்து வாழ்வதும் பழக்கமில்லை. எனவே இத்தகைய புறமணக் குழுக்கள் இரண்டு தனித்தனி இடங்களில் வாழ்ந்ததால் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு மணவுறவு கொள்வது? இதைத் தான் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய புணர்ச்சி குறிக்கிறது.

குறிஞ்சித் திணையின் ஆண் - பெண் ஒழுக்கம் என்பது புணர்ச்சி ம‌ட்டுமே. மணமுறைக்குரிய இரு வேறு புறமணக் குழுக்களைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தத்தமது வாழ்வி‌டங்களுக்கு வெளியே சந்திக்கும்போது ஒருவரையொருவர் விரும்பினால் கூடிப் பிரிவர். கூட்டத்தின் விளைவாகப் பிறக்கும் குழந்தை பெண்ணின் குழுவைச் சேரும். இது தாய்வழிக் குமுகத்துக்குரியது. அதே இணை மீண்டும் கூடுவது தற்செயலானதே. அவர்கள் வேறெவரோடும் கூட உறவு கொள்ளலாம். இதையே,

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப........


என்கிறார் தொல்காப்பியர். அதே இணையோ, வேறு இணையோ என்பதை வெவ்வேறு பிறவிகளில் என்று வருவித்துப் பொருள் கூறுவார் இளம்பூரணர். அவர் வருவித்த பிறவிகளை விட்டுவிட்டால் நமது முடிவுக்குத் தடை எதுவுமில்லை.

குறிஞ்சித் திணைக்குப் புறம் வெட்சி எனும் வேற்றுப் புல ஆநிரை கவர்தலாகும். இது உணவுக்காக முல்லை நிலத்தின் ஆநிரைகளைக் களவாடுதலும் அதினிமித்தம் நிகழும் போருமாகும். குறிஞ்சி மக்களின் உணவுக்கு வேட்டையும், காய், கனி கிழங்குகளைத் திரட்டலும் நிலவிய காலம். சிறிது பண்டமாற்றும் தொடங்கியிருக்கலாம். எனவே உணவுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முல்லை நிலத்து மாட்டைத் திருடினர் போலும்.

முல்லை:

முல்லை நிலத்தின் அகம் இருத்‌தல் ஆகும். இருத்தல் என்ற சொல் இன்று வழங்கும் அதே பொருளில் இங்கு கையாளப்பட்டிருக்கிறது. ஓர் ஆணும், பெண்ணும் திருமணமின்றிப் பொருந்தியிருப்பதை இன்று இருத்தல் என்கிறோம். அதேபோல் ஓர் ஆணும், பெண்ணும் தாம் இருவரும் விரும்பும் வரையில் பொருந்தியிருப்பதே முல்லையின் அகத்தினை உரிப்பொருள். கோவை இருளர் போன்ற மலைவாழ் மக்களிடையிலும் நாட்டுமக்கள் சிலரிடமும்(பெண்டுக்கு மேய்க்கி எனப்படும் ஆயர் பிரிவினரிடமும்) இம்முறை இன்றும் நிலவுகிறது.

இங்கு புறத்திணை வஞ்சி, மண்ணுக்காகப் போரிடல், (மண் நசைஇ வேந்தன்....) ஆநிரைகளைப் பெருக்குவதற்காக மேய்ச்சல் நிலத்துக்காகப் போரிடுவது, ஆநிரைகள் உணவுக்காகவன்றி விற்பனைக்காக ‌வளர்க்கப்படுகின்றன. வண்டி மாடுகள், உழவு மாடுகள், பொதி மாடுகள், கறவை ஆக்கள் என்றவாறு.

பாலை:

பாலை என்னும் அகத்திணை பிரிவு. இதுபற்றி இங்கு நாம் முன்பே கூறியுள்ளோம். பாலை மக்களின் வாழ்வு ஆறலைத்தலைச் சார்ந்தது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பாலை நிலத்தில் இயற்கையிலி‌ருந்து உணவை‌ப் பெற முடியாது. எனவே வழிப்பறித்துத் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த ஆறலைத்தலையும் பாலையின் கொடுமையையும் எதிர்கொள்ளும் து‌ணிவுடன் பாலையைக் கடப்போர் யா‌ர்? அவர்களின் நோக்கமென்ன? அவர்களை அதற்குத் தூண்டுவது யாது?

வாணிகம் என்று நமக்குத் தெரியும். எனவே பாலையின் இரு மருங்கும் உள்ளோர்க்கு இன்றியமையாதவை ஆகிவிட்ட பொருட்களில் வாணிகம் செய்வதற்காக வாணிகர்கள் இடர்கள் நிறைந்த பாலையைக் கடக்கிறார்கள். இந்த இடர்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு வாணிகம் ஆதாயம் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும். ஒருபுறமிருந்து மாடும் மலைபடு பொருட்களும் மறுபுறமிருந்து துணிமணிகள் பொன்ம(உலோக)ப் பொருள்கள், நெல், உப்பு, கருவாடு போன்றவையும் பாலையைக் கடந்திருக்கும். இந்த நிகழ்முறை குமுகத்தில் ஏற்பட்ட பிரிவின் விளைவாகவும் காரணமாகவும் அமைகிறது.

பண்டமாற்றும் அதிலிருந்து வாணிகமும் தோன்றும்வரை தனி மனிதர் எவருக்கும் தான் பிறந்து வளர்ந்த கூட்டத்துக்கு வெளியே வாழ்வென்பது கிடையாது. ஆனால் வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வாணிகக் குழுக்களின் உறுப்பினர்கள் தத்தம் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்துவந்து புதிய கூட்டமாக உருவானவர்கள். வாணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியில் வளம் குறைந்த இடங்களில் வழிப்பறியை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் வாணிகர்கள் தவிர்க்க முடியாதபடி போர்க்கலையில் சிறந்தவராயிருக்க வேண்டியது இன்றியமையாதது. எனவே போர்க்கலை வல்லவர்கள் வாணிகர்களாக மாறலாம் அல்லது வழிப்பறியாளர்களாக மாறலாம். அத்தகைய வழிப்பறியாளர்க்குச் சிறந்த வாழிடமாக அமைந்தது மனிதன் இயற்கையில் நிலைத்து வாழத்தக்க வளங்களைத் தராத பாலை நி‌லம்.

வாணிகம் செழித்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகவும் பின்னர் அதன் விளைவாகவும் அமைந்தது தொழில் வளர்ச்சி. நெசவு, கம்மியம், அணிகலன், தோல்தொழில் போன்ற இத்தொ‌ழில்க‌ளில் ஈடுபட்டவர்கள், தாம் இதுவரை பிறந்து வளர்ந்த மக்கள் கூட்டம் உழைத்து வாழ்ந்த நிலத்திலிருந்தும் த‌ம் கூட்டத்திலிருந்தும் பிரிந்தவர்கள். முன்பு தாம் பிறந்து வளர்ந்த கூட்டத்திலிருந்தும் அவர்களது வாழ்வின் அடித்தளமாக இருந்த நிலத்திலிருந்தும் பிரிந்து தனியே வாழ முடியாத தனி மனிதர்கள் இப்போது வாணிகராகவும், போர் வீரராகவும், வழிப்பறியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் பிரிந்து செல்ல முடிந்தது. அதனால் காதலர் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவும் உடன் போகவும் நேர்ந்‌தது. இந்‌த‌ப் பிரிவைச் சுட்டிநிற்பது பாலைத்திணை.

பாலைத் திணை காட்டும் வா‌ழ்வு அந்த நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வை மட்டுமல்ல ஐந்நிலங்களின் வாழ்நிலைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதையே உடன்போக்கும் பிரிவே என்ற புதிர் மூலம் அது விடுவித்துக் காட்டுகிறது. பாலையின் புறத்திணை வாகை. தத்தமக்குரிய திறனை மிகுதிப்படுத்துதல் என்று விளக்கம் கூறுகிறது தொல்காப்பியம். இதைச் சுருங்கக் கூறினால் மனிதன் தன் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். இதுவரை தத்தம் மக்கள் கூட்டத்தினுள் ஒவ்வொருவரது தனித்தன்மையும் அமுங்கிக்கிடந்தது. தனி வாழ்வும் கூட்டு வாழ்வும் பிரிக்க முடியாமலிருந்தால் தனி வாழ்வென்று ஒன்று கிடையாது. தனித்தன்மைகளின் வளர்ச்சிக்குக் கூட்டு வாழ்க்கை தவிர்க்க முடியாத ஒரு தடையாக இருந்தவந்தது. அத்தடை இப்போது உடைபட்டுவிட்டது. மனிதர்களின் தனிப் பண்புகள் வளரும் ‌சூழ்நிலையில் அவை ஆற்றலுடன் வெளிப்பட்டு குமுகத்தைப் புதுப்புதுப் துறைகளில் ஒரு பாய்ச்சலுடன் முன்தள்ளிச் செல்கிறது.

பாலை நிலப் போரில் ஈடுபடும் இரு கட்சியினரும் பிறரைத் தாம் மிஞ்சினால் தான், அதாவது எதிரியை அழித்தால்தான் தான் உயிர் பிழைக்க முடியும் என்று போரிடுகின்றனர். ஆறலைப்பவர் வென்றால்தான் அவர்கள் வாழ்வதற்கு உணவு கிடைக்கும். தாக்குதலுக்கு உள்ளானவர் வென்றால்தான் தாம் படு‌கொலைக்குத் தப்ப முடியும். இந்த வகையிலும்,

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.......

என்ற தொல்காப்பியர் கூற்று பொருந்தி வருகிறது.

மருதம்:

இங்கு குமுக அமைப்பே மாறித் தோன்றுகிறது. நீர்வளமும் நிலவளமும் வேளாண்மையை வளர்க்கின்றன. துணைத் தொழில்கள் பெருகுகின்றன. செல்வமும் வளமும் பெருகுகிறது. மருதமும் பாலையும் மயங்கும் வளம் குறைந்த பகுதி மக்களின் கொள்ளைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க நிலையான படையும் தலைவனும் உருவாகின்றனர். அவர்கள் பொறுப்பில் கோட்டைகள் கட்டப்பட்டுப் பாதுகாப்பு ஒப்படைக்கப்படுகிறது. கோட்டைக்குள் வேளாண்மையில் ஈடுபடாத மக்களும் வெளியே உழவர்களுமாக மக்கள் பிரிகிறார்கள். தலைமக்கள், புலமக்கள் என்ற பாகுபாடு கூர்மையடைகிறது. தலைமக்கள் சொத்துக்கு உரியவராகிறார். சொத்துடைமையின் விளைவாக ஆண் பெண் உறவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. கரணம் எனும் திருமணமுறை வருகிறது. நிலத்திலிருந்து விடுபட்ட தலைமக்களை மணந்து கொண்ட பெண்கள் தங்கள் நிலச் சொத்துரிமையை இழந்து கணவனோடு வாழ நேர்கிறது. எனவே பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை இருந்தாலும் சொத்துரிமை இல்லா நிலையில் கணவனைப் பிரிவதால் ஏற்படும் பொருளியல் விளைவுகளால் அவள் அந்த உரிமையைக் கையாள முடியாதவளாகிறாள். பிற பெண்களுக்காகவோ, பணியின் நிமித்தமோ தன்‌னைக் கணவன் பிரிந்து சென்றால் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது தவிர அவளுக்கு வேறு வழியில்‌லை. எனவே ஊடல் தான் மருதத்தின் அகத்திணை உரிப்பொருள்.

மருதத்தின் புறத்திணை உழிஞையாகும். இது ‌கோட்டையை முற்றுகையிட்டுக் கைக்கொள்வதற்கான போர். கோட்டையினுள் நிறைந்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிப்பது இதன் நோக்கம்.

நெய்தல்:

நெய்தல் நிலம் கடலை ஆள்பவரைத் தலைமக்களாகக் கொண்டவர்களின் நிலம். இங்கு கடல் வாணிகமு‌ம் கடலாதிக்கமும் மேலோங்கிய நிலை. கடலாதிக்கம் பிற நிலங்களின் மீதும் உள்நாட்டின் மீதும் ஆதி‌‌க்கத்திற்கு வழிவகுக்கும். உள்நா‌ட்டு வாணிகம் முழுவதும் இவர்கள் கையில். எனவே இவ‌ற்றை எய்தவும் காக்கவும் நிலையான வலிமை மிக்க படையும் அரசும் தேவை. இங்கு ஆணாதிக்கம் தன் உச்ச நிலையை எய்தியது. பெண் தன் கணவனைப் பிற பெண்களாலோ, சாவாலோ பிரிய நேர்ந்தால் கைம்மை[1] என்ற சிறை தவிர வேறு போக்‌கிடம் அற்றவளாகிறாள். கணவனையும் தன் விதியையும் எண்ணி இரங்குவதே அவள் நிலை.

நெய்தலின் புறத்திணை உரிப்பொருள் தும்பை. இதற்கு வலிமையைக் காட்டும் போர் என்று விளக்கம் கூறியுள்ளார் தொல்காப்பியர் (மைந்து பொருளாக.....). அதாவது ஆதிக்கம் தான் இதன் நோக்கம். ஆதிக்கத்தின் அடையாளமாகத் திறை பெறுவதும் அடிமைகளைப் பெறுவதும் இதன் நோக்கங்களாகலாம்.

வரலாற்றில் மெசப்பொட்டோமியாவில் ஆண்ட அசிரிய, பாரசீக அரசுகள் கொ‌ள்ளையை நோக்கமாகக் கொண்டு அமைந்த அரசுகள். படை வலிமையால் எதிரிககளை அழித்து அவர்கள் நாடுகளிலிருந்து கொள்ளைகள் மூலமும் திறை மூலமும் வாழ்ந்தவை. எனவே போர்களின் கொடுமை பெ‌‌ரிது. ஆனால் அலக்சாந்தரின் படையெடுப்பு அந்த அளவுக்குக் கொடியதல்ல என்று கூறப்படுகிறது. அவனது நோக்கம் தன் நாட்டுக்கு அடிமைகளை அனுப்புவதாகவே இருந்தது. எனவே எதிரிப் படைகளைக் கொன்றொழிப்பது கொள்கையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. பெர்சுப்போலிசு எனப்படும் பாரசீகத் தலைநகரை அழித்ததுகூடச் சோர்ந்துபோன தன் படை வீரர்கள் கொள்ளையின் மூலம் ஊக்கம் பெறவே எனக் கருதப்படுகிறது. மருத நிலத்தில் கொள்ளைக்காக கோட்டை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் நெய்தல் நிலத்தில் ஆதிக்கத்துக்காக நடத்தப்படும் போருக்கும் இவற்றை ஒப்பிடலாம்.

நெய்தல் நிலத்தில் வென்றவர் விரும்புவது அதிகாரத்தையும் அதற்கு அடையாளமான திறையையும் தான்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]கைம்மை என்பது கைவண்மை என்பதன் திரிபு. கைம்பெண்களைப் பருத்திப் பெண்டிர் என்றும் கூறுவதுண்டு. ‌துணையற்ற பெண்கள் உயிர் வாழ்வதற்காக கைத்தொழில் செய்து பிழைப்பதலி‌ருந்தே கைம்மை என்ற சொல் பிறந்தது. எனவே கணவனை இருவகையிலும் பிரிந்த பெண்களைக் கைம்பெண் என்று கூறலாம்.

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...2

ஐந்நிலப் பிரிவும் ஆற்றோட்டமும்:

ஐந்நிலப் பிரிவைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் ஒரு ‌பேராற்றை அதன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்து செல்ல வேண்டும். ஆறுகள் மலைகளில் தொடங்குகின்றன. முதலில் அவை நெருக்கமான அறுத்தோடிகள் எனப்படும் சிற்றோடைகளின் மூலம் மழைநீரை அல்லது பனிக்கட்டி உருகிய நீரை மலையின் குத்துச் சரிவான பரப்பில் பெறுகின்றன. இத்தகைய சிற்றோடைகள் பல சேர்ந்து சிற்றாறுகளாக மலையடிவாரத்தை அடைகின்றன. இந்நிலப் பகுதியே குறிஞ்சி நிலமாகும். இங்கு மழைக்காலம் நின்ற பிறகும் மழையின் போது மலையினு‌ள் இறங்கியிருக்கும் மழைநீரின் கசிவால் சிற்றோடைகளில் நீரோட்டம் இருக்கும். எனவே மலைப்பகுதி நீர்வளத்தில் சிறந்திருக்கும்.

மலைய‌டிவாரத்தில் நல்ல சரி‌வுடனிருக்கும் நிலத்தில் மலையைக் கடந்து வரும் சிற்றாறுகள் பாறைகளாகிய தடைகளால் தடுக்கப்ப‌ட்டு ஏறக்குறைய மேல் மட்டத்திலேயே ஒன்றுக்கொன்று பெரும் இடைவெளியின்றி ஓடும். இப்பரப்பில் பெருமரங்களும் செழிப்பான புல்வெளிகளும் தழைக்கும் அளவுக்கு நீர்வளம் இருக்கும். இது முல்லை நிலம்.

முல்லை நிலம் முடியும் இடத்தில் இச்சிற்றாறுகள் பல இணைந்து பேராறுகள் உருவாகும். இப்பேராறுகள் ஒன்றுக்கொன்று பெருந்தொலைவில் இருக்கும். அத்துடன் அவை நில மட்டத்துக்குக் கீழே ஓரளவு ஆழத்தில் ஓடும். இந்தப் ‌பேராறுகளுக்கிடைப்பட்ட நிலத்துக்கு ஆற்றில் ஓடும் நீர் கிடைப்பதில்லை. மலையிலிருந்து தொலைவாகிவிடுவதால் மழையும் குறைவாகவே இருக்கும். இங்கே பாலை நிலம் உருவாகிறது.

ஆற்று நீர் விரைந்து ஓட முடியாமல் நிலம் தட்டையாக மாறுமிடத்தில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றுகிறது. இங்கு ஆற்று மட்டம் உயர்ந்‌து விடுகிறது. பெருவெள்ளங்களின் போது ஆறு கரைபுரண்டு கிளையாறுகளையும் புதிய பாதைகளையும் ஏற்படுத்துகிறது. பழைய பாதைகள் அடைபட்டு இயற்கை ஏரிகள் உருவாகின்றன. ஆற்று நீரில் வந்த வண்டல் படிகிறது. நிலமட்டம் மேலும் உயர்கிறது. ஆறு தாறுமாறாக ஓடுகிறது. இவ்வாறு இங்கு நீர்வளமும் நிலவளமும் கொழிக்கின்றது.

ஆறு கடலை நோக்கிச் செல்லும் ‌போது கடலலைகளால் ஒதுக்கப்பட்ட மணல் திட்டுகள் அவற்றைத் தடுக்கின்றன. ஆறு தேங்குகிறது. எங்காவது ஓரிடத்தில் உடைத்துக் கொண்டு ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது. கடல் நீர் ஆற்றினுள்ளும், ஆற்று நீர் கடலினுள்ளும் மாறிமாறிப் பாய்கின்றன. பெரும் காயல்களும் உப்பங்கழிகளும் தோன்றுகின்றன. ‌நெய்தல் நிலம் இது தான்.

ஐந்திணைப் பாகுபாடு எங்கு தோன்றியிருக்க வேண்டும்:

இத்தகைய ஐந்நிலப் பிரிவு முழுமையாக இடம் பெற வேண்டுமாயின் ஆறு தோன்றும் மலைக்கும் அது கலக்கும் கடலுக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு இருக்க வேண்டும் இன்னும் குறிப்பாக முல்லை நிலம் முடிவதற்கும் மருத நிலம் தொடங்குவதற்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு வேண்டும். எடுத்துக்காட்டாக கங்கையாறு 2400 கி.மீ. நீளமிருந்தும் அதன் வடக்கே இமய மலையும் தெற்கே விந்திய, சாத்புர மலைகளின் கிழக்கு நோக்கிய தொடர்ச்சியும் மேற்கே ஆரவல்லி மலைகளும் ஆற்றை நெருக்கி நிற்கின்றன. அதனால் ஆற்றுக்கும் மலைகளுக்கும் இடையில் பாலை தோன்ற இடமின்றி அடர்த்தியான காடே இருந்தது. இந்த அடர்த்தியான காட்டையழித்து ‌வேளாண்மை செய்ய இரும்புக் கருவிகள் தோன்றிய பின்னரே இயன்றது. அதனால் கங்கைச் சமவெளியில் மக்கள் குடியேற்றம் பிற பகுதிகளை விட காலத்தாழ்த்தியே இடம் பெற்றது. இது வரலாற்றாசிரியர்கள் கூற்று.

மாறாக நீலாறு, யூப்பிரடிசு-டைகரீசு, சிந்தாறு போன்றவற்றில் இடையில் பாலை நிலம் இருந்ததால் பாலையும் மருதமும் மயங்கும் இடைநிலத்தில் அடர்த்தியில்லாத மென்காடுகளில் பழம் பெரும் நாகரிகங்கள் தோன்றிச் செழித்தன.

இன்றைய தமிழகத்தில் மலையடிவாரங்களிலிருந்து மருத நிலத்துக்குள்ள தொலைவு மிகக் குறைவு. இதனால் இங்கு பேராறுகளும் இல்லை, தனியான பாலை நிலமும் இல்லை. விரிவான மருத நிலம் காவிரிக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு தனியான பாலை நிலம் இன்மையால் பொருளிலக்கணத்ததில் கூறப்படும் ஐந்திணைப் பண்பாடும் அதற்குரிய ஐந்நிலப் பகுப்பும் இன்றைய தமிழகத்துக்கு உரியதல்ல. நாம் ஏற்கனவே கூறியது போல் இந்த ஐந்திணைப் பாகுபாட்டுக்குரிய தடயங்கள் உலகின் வேறு நாகரிகங்கள் எவற்றிலும் காணப்படாமையால் இது தோன்றிய இடம் கடலில் முழுகியதாகத் தமழிகத்தில் நீண்ட நெடுங்கால மரபாக இடம் பெற்றுள்ள குமரிக் கண்‌டமே என்று முடிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

பலர் எழுப்பும் ஒரு கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை எனும் படிவம் கொள்ளும் என்ற வகையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கக் கூடாதா என்ற கேள்வி தான் அது. தனியாக ஒரு நிலப்பரப்‌பில்லாத நிலையில் கோடையின் திரிபாகப் பாலையைக் கொள்வதற்குப் பகரம் இவை இரண்டின் இயற்கை இயல்பாகப் பாலைத் தன்மை கொள்ளப்பட்டிருக்குமேயன்றி ஒரு தனி நிலப்பரப்புக்குரிய பண்பாகக் கூறப்பட்டுப் பாலை தனியாகப் பிரிக்கப்பட்டிருக்காது.

மனிதன் பருப்பொருளான உலகிலிருந்தே தன் கருத்துக்களைப் பெறுகிறான். அவ்வாறு முதனிலையில் பருப்பொருட்களிலி‌ருந்து பெறப்பட்ட கருத்துக்கள் ஒன்றோடொன்று வினைப்பட்டு பருப்பொருளியற்கையில் இல்லாத இரண்டாம் நிலை கருத்துகளும் கற்பனையும் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் இரண்டாம் நிலைக் கருத்துகளிலிருந்து அறிவியலும் புதுப்‌புனைவுகளும் மாயைகளும் உருவாகின்றன.

மனிதச் சிந்தனை பற்றிய மேலே கூறிய அறிவியற் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் ஐந்திணைப் பண்பாட்டை உருவாக்கிய மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தில் இருந்த உண்மையான நிலைமைக்கொப்ப ஐந்திணைக் கோட்பாட்டை உருவாக்கினர். அந்த இடத்திலிருந்து புதிய நிலப்பரப்புக்கு வந்த பின்னரும் அவர்கள் தங்கள் பழைய கருத்தைக் கைவிடாமல் புதிய இடத்தில் கையாண்டனர். இருந்த உண்மை நிலையை எடுத்துக் கூறிய தொல்காப்பியர் ′′நடுவண தொழிய′′ என்று கூற வேண்டியதாயிற்று. இந்த முரண்பாட்டை நீக்க முனைந்த இளங்கோவடிகள் இங்கு நிலவிய நிலையினடிப்படையில் ஒரு ‌தீர்வைக் கூறினார். இன்றைய தமழிகத்‌தின் நிலத்தன்மை இதற்‌கு மிகப் பொருந்துகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான முகடு தமிழகத்தின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது. இந்த முகட்டுக்கு மேற்கே உள்ளதைப் போல் தமிழகத்து மலைப்பகுதி பன்மலை அடுக்கம் உள்ளதாக இல்லை. எனவே இங்கு மழைக்காலத்தில் பெருமளவில் மலையினுள் நீர்பிடித்து வைக்கப்படுவதில்லை. எனவே இங்கு த‌‌மிழகத்தின் குறிஞ்சிப் பகுதியும் முல்லைப் பகுதியும் ஏறக்குறைய அரைப்பாலைவன நிலையிலேயே உள்ளன. இந்தத் தன்மையும் இளங்கோவடிகளின் கருத்து உருவாவதற்குக் காரணமானது.

இளங்கோவடிகள் குமரிக் கண்டம் முழுகியதை அறிந்திருந்தும் மனக்குமுறலுடன் அதை நமக்குக் தெரிவித்திருந்தும் பாலைத் திணையின் முரண்பாட்டை குமரிக் கண்டம் முழுகியதுடன் இணைத்துப் பார்க்காததே இந்‌தத் தீர்வை மேற்கொண்டதன் காரணமாகும்.

பாலைத்திணை விடு(வி)க்கும் மிகப் பெரிய புதிர்:

பாலைத் திணை தன்னகத்தே கொண்டுள்ள புதிர் ஐந்தினைக் கோட்பாடு தோன்றிய இடத்தைப் பற்றிய கேள்விக்கு ம‌ட்டும் விடை காணும் திறவு கோலாக இல்லை. ஐந்தினைக் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இது எவ்வாறு?

இன்று உரையாசிரியர்களைப் பின்பற்றி நாம் ஐந்திணை உரிப்பொருள்களுக்குத் தரும் விளக்கம் பின்வருமாறு:

குறிஞ்சி : புணர்தல்
முல்லை : பிரிவை ஆற்றி இருத்தல்
பாலை : பிரிதல்
மருதம் : பிரிவிற்காக ஊடல்
நெய்தல் : பிரிவை நினைத்து இரங்கல்

இவற்றைத் தொகுத்தால் நமக்குக் கிடைப்பவை இரண்டே திணை உறவுகள் தாம்; ஒன்று புணர்தல் இன்னொன்று பிரிதல். ஆனால் உண்மை அது தானா என்ற ஐயத்தை எழுப்புவது பாலைத் திணை.

பிரிவு இருவகைப்படும் என்கிறது தொல்காப்பியம்.

அவை உடன்போக்கும் தலைவியைத் தலைவன் பிரிதலும் எனவும் கடல் வழிப் பிரிவும் நிலவழிப் பிரிவும் எனவும் வெவ்வேறு உரையாசிரியர்கள் கூ‌றியுள்ளனர். ஆனால் இத்தகைய ஐயத்திற்கிடமின்றி

கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவன் இரங்கலும்
உ‌‌ண்டென மொழிப ஓரிடத்‌தான

என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்திவிட்டார்.

அவ்வாறாயின் உடன்போக்கும் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது புலனாகிறது. தலைவ‌ன் தலைவியைப் பிரியாதபோதும் பிரிவு எனும் கருத்துப்‌ பெறுமாயின் உண்மையில் அந்தப் பிரிவு எதைக் குறிக்கிறது? யார் யாரை அல்லது எதனைப் பிரிவதைப் பிரிவென்று பொருளிலக்கணம் குறிக்கிறது? இதைத் தடம்பிடித்துச் சென்றால் பொருளிலக்கணம் கூறும் ஐந்திணை ஒழுக்கம் குறி‌ப்பது ஒரு தலைவனையும் தலைவியையும் மட்டும் பற்றியதல்ல, முழுக் குமுகத்தையும் பற்றியதென்பது புலப்படும். பிரிவு என்பது தலைவன் தலைவியைப் பிரிவதை மட்டுமல்ல, அவர்கள் இருவரும் தாம் வாழும் குமுகத்தையும் தம் நிலத்தையும் விட்டுப் பிரிவதையும் குறிக்கிறது. இந்தப் புலனத்திலிருந்து நாம் இப்போது ஐந்திணை ஒழுக்கம் எதைக் குறிக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மானிடவியல் எனப்படும் மாந்தநூல் நமக்குத் துணை செய்யும்
.

(தொடரும்)

30.7.07

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1

பொருளிலக்கணமும் தொல்காப்பியமும்:

தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகைப்படுத்தியிருப்பது தொல் தமிழ் மரபு. இன்று இம்மூன்று இலக்கணங்களும் ஒருசேர அமைந்ததாக நமக்குக் கிடைத்திருக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம், கோட்பாடு வகுத்தல் என்ற வகையில் முதல் நூலல்ல. ஏற்கனவே வழக்கிலிருந்த கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல்.‌ நூற்பாக்களில் 'என்மனார் புலவர்', 'என்ப' என்ற சொல்லாட்சிகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். அத்துடன் ஏற்கனவே அடிப்படை இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவது போலும் தொல்காப்பியம் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக,

அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப

ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிரென மொழிப

னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப

என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர எங்கும் எழுத்துக்கள் வரிசையிட்டுக் காட்டப் படவில்லை. அதேபோல் பொருளதிகாரத்திலும் ஏழுதிணைகளும் வரிசைப்படுத்தப் படவில்லை. இவ்வாறு இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவதால் நிலவிவரும் இலக்கண மரபில் அக்காலச் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்நூல் செய்யப்பட்டிருப்பதாக நாம் கருதினோமாயின் அந்த வகையில் புதிய ஒரு கோட்பாட்டைப் படைத்த முதல் நூல் என்றும் கூறலாம்.

பொருளிலக்கணம் என்றால் என்ன?

எழுத்தும் சொல்லும் இலக்கியத்தின் வடிவத்தைத் தரும் மூலப்பொருளாகிய ஓசையின் இரு நிலைகள். இந்த மூலப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்ட இலக்கியத்தின் உள்ளடக்கம் தான் பொருள். அதாவது பொருள் என்பது இலக்கியத்தின் நுவல் பொருளாகும். இந்த நுவல் பொருளை அன்று நிலவிய பல்வேறு துறை அறவி‌ய‌ல்களின் துணை கொண்டு வரையறுப்பதே பொருளிலக்கணத்தின் நோக்கம். இந்த நம் முடிவுக்குத் திணை என்றால் என்ன என்ற ஆய்வு துணை செய்யும்.

திணை என்றால் என்ன?

திணை என்பதற்கு ஒரு வரையறை கூறவேண்டுமாயின் திணைக்குரியனவாகக் கூறப்படும் முப்பொருட் பிரிவுகளையும் நாம் காண வேண்டும். அவை முதல், கரு, உரிப் பொருட்களாகும். முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இரண்டுமாகும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என முதலது ஆண்டையும் மற்றது நாளையும் அவ்வாறாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகைப்பாட்டின் விரிவு‌ தரப்பட்டிருந்தாலும் அவ்வாறு இருவகைப் பிரிவு உண்டு என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இலக்கணமறிந்தோர்க்கே தொல்காப்பியம் கூறப்பட்டுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று.

கருப்பொருள் என்ற தலைப்பின் கீழ் வருபவை:


அவ்வகை பிறவும் என்று கூறப்படுவதால் இந்தப் பட்டியல் இன்னும் விரியும் என்பது புலனாகிறது. அத்துடன் இந்த நீண்ட பட்டியலை அறிந்தோரை நோக்கியே தொல்காப்பியம் செய்யப்பட்டுள்ளது என்பதும் பு‌லனாகிறது. எனவே ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள் எவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை‌.

மூன்றாவது, உரிப்பொருள்:

உரிப்பொருள் எனப்படுவது திணைக்கு உரிய பொருளாகும். அவை
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.


ஆனால் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் திணையும் உரிப்பொருளும் கூட மேலே குறிப்பிட்ட வரிசையில் கூறப்படவில்லை. புறத்திணையியலில் நடுவிலுள்ள பாலை தனியாக‌க் கூறப்பட்டு எஞ்சியவை இதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி இரு திணைகள் முதற்பொருள் கருப்பொருட்களின்றி உள்ளன. அவை, கைக்கிளை - ஒருதலைக்காமம், பாடாண்திணை - வெற்றி பெற்றோனைப் பாடுதல், பெருந்திணை - ஒவ்வாக்காமம், காஞ்சி - வாழ்க்கை நிலையாமை கூறல்.

இந்த ஏழு திணைகளுள்ளும் உள்ள வேறுபாட்டைத் தொகுத்தல் கிடைப்பது

முதல் நான்கில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கு அதற்குரிய பொழுதுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இறுதி இரண்டும் எல்லா நிலப் பிரிவுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் உரியன. பாலை மட்டும் நிலமில்லாத ஒன்றாக நிற்கிறது.

தொல்காப்பியத்தில் முழுமை பெற்ற வடிவத்தில் காணப்படும் முதல் நான்‌கு திணைகளையும் அணுகிப் பார்த்தால் திணையின் அடிப்படைப் பண்பு புரியும்.

மக்களின் பருப்பொருட் பின்னணியான நிலத்தையும் காலநி‌லையையும் முதற்பொருளாகவும் அம்முதற்பொருட்களுடன் வினைப்பட்டு அதன் விளைவாக அமைந்த வாழ்க்கைமுறையைக் கருப்பொருளாகவும் குடும்பம் எனும் ஆண் - பெண் உறவாகவும் போர் எனும் அரசியல் உறவாகவும் மக்கள் தமக்குள் கொண்டுள்ள குமுக உறவுகளை உரிப்பொருளாகவும் கொண்டதாக திணை எனும் கருத்துருவம் விளங்குகிறது. இந்தக் கருத்துருவத்தில் முதற் பொருளாகிய நிலத்தை மட்டுமே இழந்து முரண்பட்டு நிற்கிறது பாலை.

பாலையின் முரண்பாடு:

பாலைத் திணையிலுள்ள இந்த முரண்பாடு முன்பே கண்டுணரப்பட்டுள்ளது. உலகின் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான இளங்கோவடிகள் இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளார். இதற்குத் தீர்வாக பாலை நிலத்தை குறிஞ்சி முல்லை என்ற வேறு இரண்டு நிலங்களின் கோடைகாலத் திரிபு நிலையாக் கூறியுள்ளார்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

இளங்கோவடிகள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்து இந்தத் தீர்வைத் தந்துள்ளார். இருந்தாலும் இந்தத் தீர்வு சிக்கலைத் தீர்த்துவிடவில்லை.

முதற்பொருள் கோடைகாலத்தில் பாலை வடிவம் கொள்ளலாம். ஆனால் கருப்பொருட்களும் மக்களும் ஆண்டுதோறும் இந்த மாற்றத்தைப் பெற முடியுமா? உரையாசிரியர்கள் குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலங்களுக்கும் கொடுத்துள்ள கருப்பொருள் வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முரண்பாட்டை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஐந்நிலத் தெய்வங்களும் தமிழகமும்:

மேலே தொடருமுன் ஐந்நிலத் தெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களில் வருணன், இந்திரன் என்ற இரு தெய்வங்களும் ஆரியருக்குரியனவாகக் கருதப்படும் வேதங்களில் இடம் பெற்றுள்ளமையால் ஆரியத் தெய்வங்ககளாகக் கூறப்படுகின்றனவே அப்படியாயின் அவை எவ்வாறு தொல்காப்பியத்தில் இடம்பெற்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியைத் தொடந்து இன்னும் எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எழுப்பி அவற்றுக்கு விடைதேடிக் கொண்டிருப்பது இங்கு நம் நோக்கமல்ல. இத்தெய்வங்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் உருவானவையா இல்லையா என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே விடை தேடுகிறோம்.

வருணன், இந்திரன் என்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தொல்லாய்வுகளின் மூலம் ஐரோப்பா, நடு ஆசியா ஆகிய பகுதிகளிலும் வட இந்தியாவில் தொகுக்கப்பட்டவையாகக் கூறப்படும் வேதங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் தொல்காப்பியத்தில் போல் திட்டவட்டமான நிலப்பகுதியின் நாகரிகத்‌தின் கூறுகளில் ஒன்றாக அவை கூறப்படவில்லை. அப்படியிருக்க அத்தெய்வங்களை வேறு நிலத்து மக்களுக்குரியவை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டு அறிவியலின் அடிப்படையையே புறக்கணிப்பதாகும். இந்த வகையில் உலகில் பண்பாட்டுக் கூறுகளுடன் தெய்வத்தை இணைத்து எழுதப்பட்டு தமக்குக் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. எனவே இந்தத் தெய்வங்கள் தமிழருக்கு மட்டுமே உரியவை.

(தொடரும்)

10.7.07

பாசனம் ...3

பாசனப் பணிகளில் குறிப்பாகப் பராமரிப்புப் பணிகளில் பொதுமக்களின் பங்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எடுத்துக்காட்டாக பல்லாண்டுகளாக உலக வங்கி ′′உதவி′′யுடன் நடைபெற்று வரும் காவிரி மேம்பாட்டுத் திட்டத்தில் வாய்க்கால்களில் பதிக்கப்படும் சிமென்றுப் பாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட‌டு மாட்டுத் தொழுவங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டப்படும் வயற்கால் மடைகள் பயன்படுத்தப்படாமல் வாய்க்காற் கரைகளை உடைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆறுகளுக்கும் பாசன அமைப்புகளுக்கும் அவற்‌றின் மூலம் வரும் நீருக்கும் உண்மையான உரிமையாளர்களான உழவர்களே அவற்றைப் பணோமல் சிதைக்க முற்படும் போது கூலிக்கு வேலை செய்யும் அதிகாரிகளிடம் உன்ன அக்கறையை எதிர்பார்க்க முடியும்? எனவே ஒட்டு மொத்தப் பாசனச் செலவில் பங்குடன் அவ்வப்பகுதிப் பராமரிப்புச் செலவுகளையும் அவ்வப்பகுதி மக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். ஆனால் உழவர்களுக்கு ஓர் முதன்மையான உரிமையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்குத் தாங்களே விலை நிறுவும் உரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இதில் தலையிடக் கூடாது.

புதிய பாசன அமைப்பு கீழ்க்காணும் வகைகளில் செயற்படலாம்.

1. பாசன வாரியத்தின் பொறுப்பில் அரசியல்வாதிகளோ ஐ.ஏ.எஸ். அதிகா‌ரிகளோ அமர்த்தப்படக் கூடாது. நேர்மையிலும் தொழில்நுட்பத் திறமையிலும் புகழ் பெற்ற பொறியாளர்களே அமர்த்தப்பட வேண்டும்.

2. பொதுப் பொறியியலில் (Civil Engineering) பட்டயப் படிப்பை நிறுத்தி ஐ.டி.ஐ. மட்டத்தில் ஒன்றும் பட்ட மட்டத்தில் ஒன்று மாகப் பிரிக்க ‌வேண்டும். இப்போது பணியில் இருக்கும் பட்டயப் பொறியாளர்களுக்கு, முன்பு மருத்துவத் துறையில் செய்தது போல் ஓர் ஐந்தாண்டு காலத்திற்குள் உரிய பயிற்சித் திட்டமொன்றை வகுத்து அனைவரையும் பட்டப் பொறியாளராக்க வேண்டும்.

3. அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் முதல் அலுவலக நீர்வாகி வரையிலும் களத்தில் கரைக் காவலர் முதல் வாரியத் தலைவர் வரையிலும் முற்றிலும் பொறியியல் படித்தோரே அமர்த்தப்பட வேண்டும். களப்பணியாளர்களுக்கு இணையான அலுவலகப் பணியாளரை வரையறுத்து அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றத் தக்கவராயிருத்தல் வேண்டும்.

4. ஒவ்வொரு கோட்டம் அல்லது தேவைக்கேற்ப சரக்காளர் அமர்த்தப்பட வேண்டும். சிமென்று, கம்பி போன்ற பொருட்களை ஒப்பந்தக்காரரே வழங்க வகை செய்ய வேண்டும்.

வேலையில் தரத்தில் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியாக ஒப்பந்தக்காரரே தண்டிக்கப்பட வேண்டும். மேற்பார்வை ஊழியர்கள் அல்லது பொறியாளர்கள் தாங்களாகவே அதற்குக் காரணமாயிருந்தாலொழிய அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது.

அளவைச் சரிபார்க்கும் அலுவலர் போன்றோரின் ஒத்துழையாமையால் ஒப்பந்தக்காரருக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் தேவையான உரிமைகளும் ஒப்பந்தக் காரருக்கு வழங்கப்பட வேண்டும்.

பாசனப் புலனாய்வுப் பணியில் உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள பொறியாளர்க‌ளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பொருளியலில் நியாயமான ஊக்குவிப்பும் கொடுத்து அடிப்படை ஆவணங்கள் உருவாக்குதல், இருப்பவற்றைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஒப்படைக்க வேண்டும்.

வக்கணையோடு செயல்படும் தணிக்கை முறையை மாற்றி ஆக்க முறையில் சீரமைக்க வேண்டும். களப் பொறியாளருக்கு ஒரு துளி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5. உழவர் சங்கங்கள், பாசனத்துறை இருவரும் இணைந்த அமைப்புகள் வசதியான பரப்புகளுக்கு ஒவ்வொன்றாக உருவாக்கப்பட வேண்டும். அந்தந்தப் பரப்புக்குத் தேவையான பராமரிப்புப் பணிகளைப் பாசனத்துறை செய்வதும் அதேபோல் பொதுமக்கள் தங்களுக்குப் பயன்படும் பாசன அமைப்புகளுக்குக் கேடுவராமல் நடந்து கொள்வதும் பாசனத் துறை செய்யும் பணிகளுக்குத் தேவையான செலவுகளை உழவர்கள் பாசனத்துறைக்குகுச் செலுத்துவதும் இங்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறனான அமைப்புகளை உருவாக்கிய உடன் போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடைக்கும் இன்றைய பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் பெருந்திட்டம் ஒன்றை வகுத்து உழவர்களின் கண்காணிப்புடனும் துணையுடனும் அதனை நிறைவேற்ற வேண்டும்.

பாசன அமைப்புகளுக்குப் பொறுப்பற்ற பொதுமக்களால் ஏற்படும் சிதைவுகள், திருட்டுகளைத் கண்காணிக்கும் பணியில் உழவர்களுக்கும் பொறுப்பிருக்க வேண்டும்.

தண்ணீர் அருந்தலான நேரங்களில் எவ்வாறு அதனைப் பங்கிடுவது என்பதைச் சங்கங்கள், பாசனத் துறையினரின் விரிவான கூட்டம் மூலம் முடிவு செய்து அதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயிர்களுக்கு அளவுக்கு மேல் நீர் வழங்குவதால் ஏற்படும் தீங்குகளை உழவர்களுக்கு எடுத்துரைத்து நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும். இதற்கும் உழவர் சங்கங்கள், பொறுப்பேற்க வேண்டும்.

குளக்கரைகளைப் பாதிக்காமலும் நீர்த்தேக்கத்துக்கு இடையூறுறில்லாமலும் வயல்களுக்கு கரம்பை அடிப்பதையும் செங்கற் சூளைகளுக்கு மண்ணெடுப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். மண்ணெடுப்பதை முறைப்படுத்துவரைக் கண்காணிக்கும் பொறுப்பை உழவர் சங்கங்களிடம் விட்டுவிட வேண்டும். எடுக்கப்படும் மண்ணுக்குக் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். மண்ணெடுப்பதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். அதே போல் அண்‌மைக் காலமாக இதில் கெடுபிடி செய்து கொ‌ண்டிருக்கும் சுரங்கத்துறையை ஒழிக்க வேண்டும். குளங்களில் மரங்கள் வளர்ப்பது கைவிடப்பட வேண்டும்.

6. குளங்களைத் தூரெடுப்பது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. ஏனென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்துக் குளங்களிலுமுள்ள பெருமளவு மண்ணை வெட்டி வெளியேற்றுவதற்குப் பெரும் செலவு ஆவதுடன் அதற்குத் தேவையான ஆள் பலம் கிடைப்பது கூடக் கடினம்.

  • அவ்வாறு எடுக்கப்படும் மண்ணைக் கரைகளில் போட்டால் குளத்தின் உட்புறத்தில் மடைகளையும் வயல்களையும் பாதிக்கும். எதிர்வாயில் போட்டால் எளிதில் மீண்டும் குளத்தினுள் வந்தவிடும்.

அ‌தற்கு மாற்றாக குளத்தின் உயர்நீர் மட்டத்தைப் பழைய முழுகடை நிலங்களைத் தவிர புதிய நிலங்களை எதிர்வாயில் முழுகடிக்காத அளவுக்கு உயர்த்த வேண்டும். தேவைப்பட்டால் எதிர்வாய் நிலைங்களைத் தேவைப்படும் அளவுக்கு மேடாக்கலாம். மட்டத்தை உயர்த்தும் போது கரையையும் உயர்த்த வேண்டியிருப்பதால் குளத்திலுள்ளிருந்து இதற்காக எடுக்கும் மண்ணாலும் குளத்தின் கொள்திறன் கூடும்.

களத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்குத் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நிலைமைகளை அகற்றி அவர்களது பட்டறிவுக்கும் முன்முயற்சிக்கும் ஊக்கமும் மதிப்பும் தந்தால், பாசனத் துறையின் செயற்பாடுகளோடு உழவர் பெருமக்களின் இன்றியமையா ஒத்துழைப்பும் இருந்தால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நம் நாடு வளம் பெறுமென்பதில் ஐயமில்லை.

9.7.07

பாசனம் ...2

பாசனம் இன்று தமிழகத்தில் பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இத்துறையில் பணம் செலவு செய்யும் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கே மதிப்பு. அடுத்த வரிசையில் வருவோர் பாசன நீரை முறைப்படுத்துவோர். இவ்விரண்டு இடங்களிலும் பணம் நன்கு புரளும். நேர்மை, நாணயம் ‌என்ற பெயரில் பணம் பண்ணாதவர்களை இப்பணிகளில் வைத்திருக்க மேலேயுள்ளவர்களும் கீழேயுள்ளவர்களும் விரும்புவதில்லை. அதேபோல் பிறருக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் ஏப்பம் விட்டு விடுபவர்களை‌யும் வைப்பதில்லை. இவ்விரு சாரரும் புலனாய்‌வுப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் உதவாக்கரைகள் என்று ஒதுக்கப்பட்டவர்களாகையால் இவர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. எனவே நேர்மையானவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னொரு வகையினர் எப்போது பணம் புழங்கும் பகுதிக்குச் செல்லலாமென்று ஒரே குறியாயிருப்பதினால் அவர்கள் வேலையில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இந்தப் புலனாய்வுப் பிரிவுகள்தான் பாசனத் திட்டங்களை வகுக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் நம் பாசனத்துறை ஏன் சரியாகச் செயல்படவில்லை என்பதன் காரணங்களிலொன்று புலப்படும்.

இன்னொரு புறம் குளங்களின் பராமரிப்பு. குளங்களின் பராமரிப்பில் பெரும் பங்கு மண் வேலைக்கு. ஆனால் பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் கூலிகள், விலைகளின் பட்டியல் நிறுவக் கடைப்பிடிக்கும் தவறான நடைமுறையால் மனித ‌உழைப்பில் செய்யப்படும் மண்வேலை கட்டுபடியாவதில்லை. இயந்திரங்கள் கொண்டு செய்யப்படுபவை கட்டுபடியாகும் நிலையில் உள்ளன. எனவே குளங்கள் பராமரிப்பில் பொதுவாக துறையினரும் ஒப்பந்தக்காரர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வெள்ளம், வரட்சிக் காலங்களில் அரசு ஒதுக்கும் பெருந்தொகைப் பணத்தைச் ′′செலவு′′ செய்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. எனவே மழைக் காலங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

அடுத்து பொறியாளர்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையர்களான பொறியாளர்‌கள் மீது வருவாய்த் துறையின் கட்டுப்பாடு கிடையாது. பொதுப்பணித்து‌றை வளாகத்தினுள் காவல்துறையினரோ பிறரோ முன் இசைவின்றி நுழைய முடியாது. இத்துறையின் தனித்தன்மையை பேணுவதற்காகவே காசுக்கணக்கு, பொருட்கணக்குகள், கோப்புப் பராமரிப்பு என்று எல்லா வகையிலும் பிற துறைகளிலிருந்தும் வேறுபட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வனத்துறையிலும் இத்தனித் தன்மை பேணப்பட்டது.

இன்றைய நிலைமை என்ன? இன்றைய பாசனப் பொறியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் இன்னும் துல்லியமாகக் கூறவேண்டுமாயின் மாவட்ட ஆட்சித் தலைவர்களி‌ன் மனைவிகளின் எடுபிடிகள். எனவே பொதுப்பணித்துறையிலடங்கிய பாசனம் அரசியல் விளையா‌ட்டுகளின் களம். பொறியாளர்கள் மேலே மேலே கப்பம் கட்ட வேண்டியிருப்பதும், ஓய்வு பெறக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதும் அனைத்துத் துறைகளிலும் போல் விதிவிலக்கின்றிக் காணப்படுவதால் அதைத் தனியாகக் கூற வேண்டியதில்லை.

பொதுப்பணித் துறையிலுள்ள இன்னுமொரு பெரும் நோய் பொறியாளர்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிளவு; பட்டப் பொறியாளர், பட்டயப் பொறியாளர் என்ற பிளவு. முன்பு மருத்துவத் துறையில் நிலவிய இது போன்ற பிளவைத் தீர்த்தது போல் இதையும் தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்குத் தடையாயிருப்பவர்கள் இவ்விரண்டு காரர் பெயரில் செயற்படும் சங்கங்களில் தலைவர்களே. இந்தப் பிளவைப் போக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இத்தலைவர்கள் மறைமுகமாக அவற்றை முறியடித்து வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பணியின் தரத்தை மேம்படுத்தப் பயன்பட்ட பொறியாளர் சங்கம் இன்று தெருநாய்களில் தலைமையாகி விட்டிருக்கிறது. பிரித்தாளும் நம் அரசும் இப்பிளவைப் பேணிக் காக்கிறது.

பொதுப் பணித் துறையின் அடிப்படை அதிகாரிகளான பிரிவு அலுவலர்களெனும் பொறுப்பிலிருக்கும் பொறியாளர்கள் தலையில் சிமென்று, இரும்பு போன்ற பொருட்களைப் பேணும் சரக்காளர் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. களத்தில் வேலைகளை நேரடியாக மேற்பா‌‌ர்வையிடும் மேற்பார்வை ஊழியர்கள் அவர்‌கள் மேற்பார்வையிடும் வேலைகளின் தரத்துக்குப் பொறுப்பல்ல. அவர்களின் மேல் அதிகாரியான பிரிவு அலுவலான பொறியாளருக்கே முழுப்பொறுப்பும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்களினால் முழு ஈடுபாட்டுடன் பொறியாளர்களால் செயற்பட முடயாமல் போகிறது.

வெள்ளையராட்சிக் காலத்தில் ‌விஸ்வேஸ்வரய்யாக்களையும் கிரு‌ஷ்ணய்யர்களையும் ஏகாம்பரங்களையும் உருவாக்கிய பொதுப்பணித்துறையால் இன்று ஒரு குமாரசாமியை மாநிலத்தை விட்டுத் துரத்தத் தான் முடிந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

அனைத்தையும் அனைவரையும் தங்கள் ஆதிக்கத்தினுள் கொண்டு வந்தவிட வேண்டுமென்ற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளின் பேராசை ஒரு புறம். இன்னொரு புறம் சொன்னால் வியப்பாயிருக்கும். மாநிலப் பணித் தேர்வானையத்தால் இளநிலை - உதவியாளராகத் தேர்வு செய்யப்பட்டதன்றி வேறு தொழில்நுட்பத் தகுதி ஏதுமில்லாமல் தணிக்கையா‌ளர் என்ற பெயரில் செயற்படும் உண்மையான பொறுப்பேதுமற்ற ஒரு வலிமையான கும்பலின் ஆதிக்கத்துக்குப் பொறியாளர்கள் அனைவரும் அஞ்சும் ஓர் இழிநிலை உள்ளது. தணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு காசுச் செலவுக்கும் இவர்கள் கூறும் வக்கணைகளை மீறி முடிவு கூறும் அதிகாரம் இருந்தும் அதனைச் செயற்படுத்தும் துணிவு இன்றைய பொறியாளர்களுக்கு இல்லை.

அதேபோல் தொழில்நுட்பத்தைக் குறித்து ′′தணிக்கை′′ ‌ செய்வதற்கென்று வரைவுப் பிரிவு என்று ஒன்று உண்டு. அது வரைவதெல்லாம் கடிதங்களைத் தான். களப்பணியாளர்கள் செய்யும் பணிகளில் ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா என்ற ஆய்வையே இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். தொழில்நுட்பம் குறித்த ஆக்கமுறையிலான எந்தக் கருத்தும் இவர்களிடமிருந்து வராது. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரின்பணி ′′ஒருவன் வேலை செய்ய ஒன்பது பேர் நொட்டை சொல்ல′′ என்பதாகும். அதுமட்டுமல்ல, இவ்வாறு நொட்டை சொல்லச் சொல்ல அவர்களுக்கு வரும்படியும் கிடைக்கும்.

இதற்கு ஒரு காரணம் துணிவும் திறனும் உள்ள செயற்பொறியாளர் போன்ற உயரதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடக்குமுறையின் முன் அடங்கிப் போய்விடுகிறார்கள். அல்லது ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். பிறர் வரும்படி கருதி இந்தத் ′′தணிக்கை′′ களை ஒதுக்கத் தங்களுக்குள்ள அதிகாரத்தைக் கையாள்வதில்லை. அத்துடன் பொறியாளர்களின் ஒற்றுமை இன்மை வலிமையான ஒரு காரணம்.

இக்காரணங்களால் பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் எவருமில்லை. பொறியியல் படித்த அதிகாரிகளே தான் உள்ளனர் என்ற நிலை தான் இன்று நிலவுகிறது.

பாசனத் துறையில் இன்று ஒருவகைத் தண்ணீர் வாணிகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி உழவர்களும் தத்தமக்குத் தண்ணீர் திறந்துவிடுதல், பாசன அமைப்பு பராமரித்தல் தொடர்பாகப் பொதுப்ப‌ணித்துறையையும் வருவாய்த்துறையையும் அணுகுவதற்கென்று சங்கங்கள் அமைத‌துள்ளனர். இச்சங்கங்கள் முதலில் வரட்சிக் காலங்களில் உழவர்களிடம் பணம் திரட்டி இவ்விரு துறை அதிகாரிகளுக்கும் கொடுத்து தண்ணீர் கொண்டு வந்தனர். இப்போது தண்ணீர் தாராளமாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதில் சங்கத் தலைவர்களுக்கும் பங்குண்டு. பாசனத்துறைக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்!

இனி தொழில் நுட்பப் பக்கத்தைப் பார்ப்போம்,

1. பண்டைக் குளங்களின் கரைகள் வளைவாக ஆழமான இடத்தில் சிறிது உள்வாங்கி இருக்கும். "கொக்கு வெளுத்திருக்கும் குளம் கோணியிருக்கும்" என்ற சொல்வடை கூட வழக்கிலிருக்கிறது. ஆழமான இடத்தில் உள் வாங்கியிருப்பதிலும் முனைகள் வளைந்து இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு.இன்றைய பொறியாளர்கள் அவ‌ற்றை அறியார்.

2. ஓடைகள் அல்லது ஆறுகளுக்குக் குறுக்கே குளங்கள் அமைப்பது முன்பு வழக்கமில்லை. அணைக்கட்டுகள் அல்லது மன்சூரம்புகள் எனப்படும் மண்‌ணைகள் அமைத்து வரத்துக் கால்வாய்‌கள் வழியாகக் குளங்களுக்குத் தண்ணீ‌ரைக் கொண்டு வருவதே வழக்கம் இதனால் குளங்களில் வண்டல் படிவது குறையு‌ம். இப்போது இந்த நடைமுறை ‌புதிய குளங்கள் அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

3. குளங்கள் தொடர்களாக அமைந்துள்ளதால் மேலே ஒரு குளத்தில் உடைப் பெடுத்தால் கீழேயுள்ள அனைத்துக் குளங்களும் உடைக்கும். குளங்கள் தம் போக்கில் கண்ட இடத்தில் குறிப்பாக ஆழமான இடத்தில் உடைப்பெடுத்தால் அதனால் ஏற்படும் இழப்பு மிகப் பெரிது. தண்ணீர் முழுவதும் வீணாகியும் விடும். கரை வரை வயல் இருப்பதாலும் குளத்துப் பக்கம் நீரிருப்பதாலும் உடைப்பு ஆழமாக இருப்பதாலும் உடைப்பை அடைக்க மண் கிடைப்பது கடினம். இதைத் தவிர்ப்பதற்காக மறுகாலுக்கு அருகாமையில் மறுகால் மட்டத்தை விட ஓரடி தாழ்வாகக் கொஞ்ச நீளத்துக்குக் கரையை அமைத்திருப்பது வழக்கம். இன்று அம்முறை கைவிடப்பட்டுள்ளது. உடைப்பெடுப்பது "அனைவருக்கும்" ஆதாயமாயிருப்பதால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைககளில் யாருக்கும் ஆர்வமில்லை.

நடைமுறைக் கோளாறுகள்‌‌:

1. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குளப் புறம்போக்குகளைப் பட்டா போட்டுக் கொடுப்பதால் குளங்கள் அழிந்து வருகின்றன.

2. எதிர்வாயில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதால் குளங்கள் சுருங்குவதுடன் மேடுதட்டியும் வருகின்றன.

3. முன்பு செங்கல் ஆளைகளுக்கும் வயல்களுக்கும் குளங்களில் படியும் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இப்போது கருவேல மரங்கள் வளர்க்‌கப்படுவதாலும் வள்ளுவர் வாய்மொழியில் கூறுவதாயின் "வேலொடு நிற்கும்" வருவாய்த் துறையினர் மற்றும் இப்போது இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சுரங்கத் துறையினரின் அளவு மீறிய அரிப்புத் தொல்லையாலும் நீமையுரங்களின் ஆதிக்கத்தாலும் இம்முறை கைவிடப்பட்டு அதன் விளைவாகக் குளங்கள் மேடிட்டு வருகின்றன.

4. குளங்களில் உள்ள மடைகளை அடைக்கும் சீப்புகள் காணப்படுவதில்லை. அவற்றைப் பராமரிக்க எந்த ஏற்பாடும் இல்லை. எனவே பெருகும் தண்ணீர் விரையில் வடிந்து வெளியேறி வீணாகிறது.

5. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. வல்லான் வகுத்ததே வாய்க்‌கால் என்பது போல் முன் வயல்காரர்கள் தண்ணீரை வீணடித்து கடைமடை உழவர்கள் வாடவிடுகிறார்கள். சமுதாயத்தில் எங்கும் போல் இங்கும் அராசகம் நிலவுகிறது.

இந்நிலையில் பொதுப் பணித்துறையில் பாசனத் துறையைத் தனியாகப் பிரித்துக் தன்னாட்சியுடைய ஒரு வாரியமாக அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கும் வழக்கம் போல் உலக வங்கியில் நெருக்குத‌லே காரணம். இந்த நெருக்குதல் இல்லாமல் நாமாகவே செய்திருக்க வேண்டிய பணி இது. கடன் வாங்குவதற்காகத் திருமணம் ஏற்பாடு செய்த "கடன் வாங்கிக் கல்யாணம்" திரைப் படக் கதாநாயகனின் தந்தையாகி நிற்கின்றனர் நம் ஆட்சியாளர்‌கள்.

(தொடரும்)

பாசனம் ...1

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாயிரமே என்று கப்பலோட்டிய தமிழர் நிறுவியுள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தில் மழையைப் போற்றியே தொடங்குகிறது என்பது புலப்படும். சேர இளவல் மாமழை போற்றும் என்று வாழ்த்துகிறார். சீவகச் சிந்தாமணி பூமகள் இலம்பகத்தில் மழைநீர் ஆற்றிலிருந்து வயலுக்கு இட்டுச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு அறுவடை ஆவது வரை சொல்லோவியமாக்குகிறது.

இவையனைத்தும் ஒருசேர விளக்குவது தமிழக மக்கள் மழையின் அருமையை அதாவது அதன் போதாமையைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள் என்பதையே. அதன் விளைவு பாசனப் பொறியியலின் பிறப்பு. ஓராண்டு முழுவதும் வேளாண்மைக்குத் தேவைப்படும் மொத்த நீரின் அளவுக்கு ஆண்டின் மழைப் பொழிவு போதுமாக இருந்து ஆனால் அந்தந்‌தக் காலத்தில் அவ்வப்போது பெய்‌யும் மழை போதாமல் இருந்தால் அங்கு பாசனம் தேவைப்படும். அந்தந்தக் காலங்களில் பெய்யும் மழையே போதுமானதாக இருப்பதால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாசன முறையோ அமைப்புகளோ இல்லை.

தமிழகத்தில் பாசன முறைகளைத் தொடங்கியவர்‌கள் பாண்டியர்கள் என்பதற்கு ′′மழை பினித் தாண்ட′′ பாண்டியர்களை வாழ்த்துவதன் மூலம் சிலப்பதிகாரம் சான்று ‌தருகிறது. மழையை வான் என்று திருக்குறள் அழைக்கிறது. எனவே ஆகாய கங்கை எனப்படுவது மழையே. அதை நிலத்துக்குக் கொண்டு வந்தவனாகக் கூறப்படும் பகீரதனும் ஒரு பாசன வித்தகன் தானோ?

பெரும் பரப்பில் பாசன அமைப்புகளை அமைத்துப் பராமரிப்பதன் மூலமே பண்டைய அரசுகள் மக்கள் மீது தம் பிடிப்பை வைத்திருந்தன. இறைத்தல் அடியாகப் பிறந்த இறைவன், குடித்தல் தொடர்பாகப் பிறந்த குடி மகன் உறவு இதைத் தான் குறிக்கிறது.

உலகில் நெருக்கமாகக் குளங்களைக் கொண்ட நாடுகள் எகிப்தும் தமிழகமும். அவற்றிலும் தமிழகத்துக்கே முதலிடம். இங்கு சராசரி அரை சதுர மைலுக்கு - ஏறக்குறைய ஒன்றேகால் சதுர கிலோமீற்றருக்கு ஒரு குளம் உள்ளது.

குளங்களின் வடிவமைப்பிலும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் உத்தியே சிறந்தது. இவையன்றி குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் மிக நுணுக்கமான சில உத்திகள் இன்றுவரை யாராலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

தமிழகம் வெள்ளையர் வருகைக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாத போர்களினால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ஊரவைகள் என்ற அமைப்புகள் பாசன அமைப்புகளையும் பாசன நடைமுறைகளையும் ஓரளவு பேணி வந்தன. அத்துடன் பேரரசர்களும் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவ்வப்போது அணைகளைக் கட்டியும் வாய்க்கால்களை வெட்டியும் குளங்களை அமைத்தும் பாசனப் பணியாற்றியுள்ளனர். இருந்தாலும் கரிகாலன் என்ற பெயரில் சங்க காலத்தில் வாழ்ந்த இரு பேரரசர்களும் (கரிகாலர்கள் மூவர் என்று கருதுவாரும் உண்டு) செய்ததுபோல் தமிழகத்தில் மிகப் பேரளவுப் பாசனப் பணி யாரும் செய்ததில்லை. புகழ்மிக்க கல்லணை கட்டியது, காவிரிப் படுகை முழுவதும் காவிரிக்கும் அதன் கிளைகளுக்கும் கரையமைத்தது, திருவளவாய்க்கால், கட்டளைக் கால்வாய் போன்ற நீண்ட நெடுங்கால்வாய்‌களை அகழ்ந்தது ஆகியவை அவர்களது அருஞ்செயல்களாகும். குடகுப் பகுதியில் மறிக்கப்பட்டுத் திருப்பப்பட்ட காவிரியைப் போரிட்‌டுக் கரிகாலன் மீ‌ட்டு வந்ததைப் புராண வடிவில் மணிமேக‌லை கூறுகிறது.

தமிழகத்தில் அரசியல் சீ‌ர்மை சிதையச் சிதையப் பாசனப் பராமரிப்பும் குறைந்தது. வெள்ளையரும் தொடக்கத்தில் இதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள் அவர்களைச் செயலுக்குத் தூண்டின. தம் நாட்டில் பாசனப் பட்டறிவு இல்லாதிருந்தும் எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்த பாசன அமைப்புகளையும் மழையளவுகளையும் நோட்டமிட்டு இன்று நம் நாட்டில் நிலவிவரும் பாசனக் கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினர்.

இந்த வகையில் அவர்கள் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள இறும்பூதுகள் எண்ணினால் நம்மைப் புல்லரிக்க வைக்கும். ஒரு புறத்தில் அணை கட்டி எதிர்ப்புறத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் பெறும் ஒப்பற்ற பெரியாற்று ஆணையை வடிவமைத்து நிறுவிய பென்னிக்குவிக் என்ற பெருமகன் முன்னாள் சென்னை மாநிலத்தி‌லடங்கியிருந்த அனைத்து ஆறுகள், சி‌ற்றாறுகள் ஓடைகள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆற்றுப் பள்ளங்களென்றும்(River Basins) பள்ளங்கள் என்றும்(Basins) சிறு பள்ளங்களென்றும்(Minor Basins) வகுத்து திணைப்படம்(Map) உருவாக்கினார். இப்படம் பென்னிக்குயிக் திணைப்படம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மண்டலத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், கிளைவாய்க்கால்கள் அவற்றின் கிளைகள் என்று முடிவின்றி 10அடி நீளமுள்ள வயற்கால்கள் வரை காட்டும் பாசனத் திணைப்படங்கள் கிராமத் திணைப்படங்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டன. அதே அளவில் வாய்க்கால்கள், வயல்கள், சமமட்ட‌க் கோடுகள் ஆகியவற்றைக் காட்டும் மட்டத் திணைப்படங்கள்(Block level maps) உருவாக்கப்பட்டன. அவற்றின் மட்டங்களுடன் தரப்பட்டுள்ளன. தஞ்சை மண்டலத்தில் உள்ள வடிகால்களைக் காட்டும் வடிகால்‌ திணைப்படங்‌களும் உள்ளன. மிகச் சிறு வயற்கால்கள் உட்பட ஒவ்வொரு வாய்க்காலும் ஓடும் புல எண்களையும் அவை நீர்பாய்‌ச்சும் புலங்களின் எண்களையும் காட்டும் பெரும்பெரும் பாசனப் பதிவேடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆங்கிலப் பொறியாளர் ஒருவர் (அவர் பெயர் ‌நினைவில்‌லை) முன்னாள் சென்னை மாநிலத்திலுள்ள மலைமுகடுகளுக்கெல்லாம் குதிரையில் சென்று ஒவ்வொரு ஓடை, சிற்றாறுகள் ஆகிய அனைத்தின் தோற்றம், பாயும் பாதை, அவற்றின் நீர்வளம் ஆகியவற்றைத் தொகுத்து அவற்றினடிப்படையில் எங்கெங்கு என்னென்ன கொள்திறனில் ‌எந்தெந்தப் பகுதிக்குப் பயன்படும் வகையில் என்னென்ன பாசன அமைப்புகள் அமைக்கலாம் என்று கூறும் நூல் ஒன்றை இயற்றியிரு‌க்கிறார். இன்றைய பாசனத் திட்டங்களில் ஏறக்குறைய எல்லாமே அவரால் பட்டியலிடப்பட்டவையே என்று தெரிகிறது.

பாசனத்துறைக்குப் புறத்தே நிலஅளவைத் துறையி‌னர் நாட்டிலுள்ள அனைத்துக் குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளைக் காட்டும் இந்திய அரசுத் திணைப்படங்களையும் வட்டத் தி‌ணைப்படங்களையும்(Taluk maps) உருவாக்கியுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வருவாய் ஊருக்கும் உரிய தீர்வைப் பதிவேடு (A Register எனப்படும் Settlement Register) அவ்வவ்வூரிலுள்ள பாசன ஆதாரங்களை திணைப்படமாகக் காட்டுகிறது. அடங்கல் பதிவேடு கூட பாசன ஆதாரங்களின் அடிப்படையிலேயே பராமரிக்கப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆற்றியுள்ள இந்த அருஞ் செயல்களுக்கு மாறாக, விடுதலை பெற்ற நாம் என்ன செய்துள்ளோம்? பெரியாற்று நீர்மின் நிலையத்திலிருந்து பாசனமில்லாக் காலத்தில் வெளியேறும் நீரைப் பிடித்து வைப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட வைகை அணையை அளவறியாமல் பெரிதாகக் கட்டிவிட்டமையால் அதன் கீழுள்ள வைகையாறு முற்றிலும் வறண்டு போயிற்று. பெரியாற்றில் நீரிருக்கிறதென்ற மெத்தனத்தால் பெரியாற்று - வைகைப் பாசன மண்டலத்திலுள்ளள பல்லாயிரக்கணக்கான குளங்களையும் சரிவரப் பராமரிக்காமையால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் நம் மூதாதையர் போற்றிய அருமருந்தன்ன மழைநீர் வீணாகிக் கடலினுள் சென்று விடுகிறது.

தமிழக மக்கள் வகுத்துள்ள ஏரிக் கோட்பாடுகள் ஒப்பற்றவை. குளங்கள் தொடர்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளத்திலுள்ள மறுகால் அதன் கீழுள்ள இன்னோர் குளத்தினுள் விழும். அந்தக் குளத்து மறுகால் அடுத்த குளத்தினுள் என்றிவ்வாறு 50 குளங்களையும் மிஞ்சும் தொடர்கள் உண்டு. இந்த அமைப்பு நீரை எந்த இழப்புமின்றி மிகச் சிக்கனமாகப் பிடித்து வைக்க உதவுகிறது. இறுதியிலுள்ள குளத்தின் மறுகால் ஏதாவதொரு ஆற்றில் அல்லது ஓடையில் சேரும். அவ்வாறு சேரும் நீரை அணைகள் மூலம் கீழேயுள்ள குளங்களுக்குத் திருப்பிவிடும் அமைப்புகளும் உள்ளன.

இவ்வளவு சிறப்பாக அமைந்த நம் பாசன முறையின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிகப் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளில் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்‌கள் அவ‌ற்றை மேம்படுத்தவும் செய்தனர். ஆனால் நாமோ விடுதலை கிடைத்த இந்த 50 ஆண்டுகளில் நாமாக எதுவும் செய்யாதது மட்டுமல்ல அவர்கள் செய்து வைத்தவற்றைப் பேணவும் இயலாதவர்களாகி விட்டோம்.
எடுத்துக்கா‌ட்டுக்கு, குளங்கள் சீரமைப்புத் திட்டம் எனும் பெயரில் செயல்படும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். நாம் முதலில் குறிப்பிட்ட பெனிக்குயிக் திணைப்படத்தில் அமைந்த சிறுபள்ளங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குளங்களைப் பெருந் தொகுதிகள், சிறுதொகுதிகள், தனிப்பட்ட குளங்கள் என்று பகுத்து அவற்றிலடங்கிய குளங்களின் முழு விளக்கங்களையும் திரட்டி அவற்றுக்கு வரலாற்றுக் குறிப்புகள் உருவாக்கி ஒரு சிறு பள்ளத்துக்கு ஒரு நூல் என்ற அளவில் உருவாக்கினர். அத்துடன் அமையாது அவ்வரலாற்றுக் குறிப்புகளில் தரப்பட்டுள்ள வரையளவுகளுக்கேற்ப ஒவ்வொரு குளத்தையும் சீரமைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கும் பணி ஒரு பகுதி தான் முடிவுற்றது. சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

இன்றும் குளங்கள் சீரமைப்புக் கோட்டங்கள் செயற்படுகின்றன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் சொன்னால் வெட்கக்கேடு. குளங்களின் அமைப்பில் மறுகால் மட்டம் மடைகளின் தளவடி மட்டம் ஆகியவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இந்த மட்டத்தை நிறுவுவதற்காக மாபெரும் நிலவியல் அளவை மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று சிறிதும் அக்கறை இன்றி மட்டங்கள் நிறுவும் ‌இப்பணி செய்யப்படுவதால் அவற்றிற்குரிய நம்பகத் தன்மையை அவை இழந்து நிற்கின்றன. பெரும்பாலான பாசனத் திட்டங்கள் இவ்வாறு உருவாக்கப்படும் வரலாற்றுக் குறிப்புகளையே சார்ந்து நிற்கின்றன என்பதை வைத்து நம் பாசனத் திட்டங்களின் தரத்தை அறுதியிடலாம்.

பாசன அணைகளின் வடிபரப்புகளில் நீர்மின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கோதையாறு, நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு, மதுரை மாவட்டத்திலுள்ள சுருளியாறு போன்றவை. இவை அமைக்கப்பட்ட நாளிலிருந்தே ஒழுங்காகச் செயற்படுவதில்லை. ஆனால் அவற்றில் பெருமளவு நீ‌ரைத் தேக்கி வைத்துக் கொண்டு பாசனத்துக்கு நீரின்றிப் பயிர்கள் வாடும் நி‌லையிலும் அந்த நீரை வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிடுவதற்கான முன்னமைப்புகளுடன் அந்த அணைகள் கட்டப்படவுமில்லை. பெரியாற்று நீர்மின்திட்டத்தில் பாசன நீர் வெளியேறுவதற்கான அமைப்புகள் சிறப்பாக உள்ளன. இந்‌தப் புதிய அமைப்புகளிலுள்ள இச்சிக்கல் மக்களுக்குத் தெரியவுமில்லை.

(தொடரும்)

8.7.07

IT IS NOT VEDIC ASTROLOGY, IT IS KUMARIAN ASTRONOMY

Indian astrology is based on the Panchangams prevalent here. Panchangams are the depositories of the astronomical achievements of our ancients. The calendar system of our country is the evolution of our knowdedge of the solar system. They were able to understand the 365 days (approximately) taken by the Sun for its apparent north-south journey in the sky is the result of the movement of the Earth along its orbit around the Sun. From this knowldge they divided a circle into 360 degrees by rounding off 365 to 360. Likewise, viewed from the Earth the Moon returns approximately to its original position with reference to the stars in the sky in 12 to 13 lunar months, a lunar month being the time interval between two successive full moons or new moons, nearly 29½ days, From this the lunar year of 12 and 13 months developed. The apparent north-south journey of the Sun viewed from thd Earth, which might have been a latter discovery was combined with the number 12 and the natural year (Solar Year) with 12 months was formulated. With these approximations a deodecimal numerical system was also developed and applied in other feilds also. Constellations identified to represent each month and configurations were formed for them according to their imaginations or deities worshipped by them. Each month was called in accordance with the sign or coufiguration allotted to the particular constallation in which Sun was during that month. The Kollam Era adopted in Kerala today has the names of the signs or Rasis for the months, though the beginings of months do not conincide with the entry of the Sun into the respective signs. It is a vestige of the old practice. Pure lunar year is adopted by the Muslims all over the world. A 19 years cycle of 12 and 13 lunar month is adopted by the Jews and Chinese. One of such circle started on 16-2-1999. This day was noted as dwaparayuhathi in one of the Tamil daily calendars. Once in 19 years this circle coincides with the solar year.

The tropical Zodiac which starts on 21/22 March and ends on 20/21 March next is not the original one (Sidereal Zodiac) derived from the real solar positions as seen from the Earth but one which was abstracted from it and applied to the natural or calender year. The calender year is faster by about 20½ minutes than the sidereal year. The delay of the sidereal Zodiac is called precession. The two zodiacs coincide once in 26,000 years approximately. Thus the tropical Zodiac has only geo-solar relation and no stellar relation. Moreover all our knowdedge and application of astronomy and even the one that claims to be the most advanced is only geo centric because everything is viewed and calculated with relation to the Earth by the men living there.

The northward journey of the Sun in relation with Earth starts on December 21/22. This day is called the southern nor winter solstice. It crosses the equator on March 21/22 which day is called the spring equinox. It reaches the northen extreme in this journey on June 21/22 and returns southwards therefrom. It once again crosses the equator on September 21/22 which day is called the autumn equinox. As far as the Rasis or signs are concerned. the Sun starts its northward journey on the day it enters the sign of Capricon (Maharam or shark). It means that the Sun is just above the tropic of Capricon. Similarly when the Sun is just aboce the equator on March 21/22 it is said that the Sun enters into the sign of Aries (Mesham or Ram) and so on.

This cycle of entries of the Sun into the 12 successive signs is called the tropical zodiac. Usually it starts from Aries and ends with Piscus (Meenam- fish). Though it is represented by a circle it is observed only horizontally from the Earth by the north-south movement of the Sun between the tropic of Capricon in the south and the tropic of Cancer in the north and hence the name tropical zodiac.

This cycle is of great significance in tracing the six seasons. The Elavenil or Vasantham (spring) season starts with the entry of the Sun into the Rasi of Mesham. There are celebrations denoting the two solstices and the equinoxes even today. Thai Pongal or Mahra Sankaranthi is observed in the name of the winter solstice. Likewise Tamil new year day is celebrated in the name of the Sun entering the Mesha rasi or Chithirai Vishu. The first day of the month Adi is also celebrated in the name of the northern solstice. Likewise some people celebrated Ayppasi Vishu in the name of autumn equinox.

Though these days are observed in the names of the four nodel points in the movement of the Sun in relation to the Earth the actual position occurs 23/24 days in advance. This discripancy had been pointed out by eminent scholars like Tilak and Bharathiar. But the reason for this shift of 23/24 days has not been clearly pointed out by them. The general view is that this difference is due to the sidereal shift or precession of the solar system in relation to the tropical zodiac. If that be so according to astronomic observations the entry of the Sun into the first point of Aries which is said to take place on April 14 by our astrologers actually happens about 54 days earlier, ie the first point of Aries has shifted to the Rasi Meenam (Pisces) with relation to the Earth. The shift is about 54° and the year necessary for this shift at a rate 72 years for the shift of 1° in the anticlockwise direction of the sidereal zodiac is 54X72= 3888 years, ie about 2 millennium B.C. Only nearly 30X72=2160 years ago, ie about 160 B.C. the Sun would have entered the first point of Aries in the sidereal zodiac on 21st March. But according to the Sangam lileratured of Tamil the practice of reckoning the months in the same manner as is being done now was prevalent even at that time. If the shift of 24 days is due to precession, the process of fixing the entry of the Sun into the first point of Aries in the sidereal zodiac would have taken place at least 26000 years earlier than 160 B.C.

But the problem is that human mind is not concerned with the stellar movements in their day to day life. Their first and foremost concern is to fix the seasons. Seasons are governed by the annual joruney of the Earth round the Sun observed by the north-south movement of the Sun as observed from the Earth. Any interference with this cycle will result in dislocation of the seasons. Bharathiar and some astrologers pointed out the 23/24 days shift in fixing the beginning of months were concerned only about this dislocation and desired it should be corrected.

The axis of the Earth is tilted by about 23½ in relation to the Sun. The Sun seems to travel north and south in the sky, a full round during a calander year thereby forming the solstices and equinoxes only because of this tilt. This 'horizontal' movement had been transfiguresd as a circular or 'vertical' movement and the rasi cycle or zodiac was formed. The rasi cycle had been abstracted from the actual movement of the Sun, Earth and Moon among themselves, expecially to denote the movement of the Earth in its orbit around the Sun.

Though there is no relation to the topical zodiac with the stellar positions, our ancients made an indirect relation. The Sun rotates in its axis once in 25'∕₃ days nearly. But due to the Shift in the relative positions of Sun and Earth due to the orbit of the Earth round the Sun during this period the time taken for the self rotation of the Sun in relation with the Earth is neraly 27'∕₃ days. There are some black spots visible in the Sun called sunspots which enlarge, shrink and disappear alternatively. Usually when such a single spot is visible from the Earth at the center of the Sun violent interferences are observed in the Earth's magnetic field. This interference has been observed at intervals of about 27 days. It is explained that there is a hollow or vortex in the Sun which is perpendicular to its axis of rotation. This vortex faces the Earth once in every 27'∕₃ days. In our Panchangams this day is called Karthihai or Krithihai and arthodox people observe fasts on this day. These 27'∕₃ days have been divided into 27 parts and each part is called a Nalmeen (daily star) or Natchatram.

In naming these daily stars constellations different from those assigned for naming the rasis have been selected. The daily star circle does not coincide with the yearly rotation of the Earth around the Sun. 27 rotations of the Sun in relation to Earth takes nearly 738 days. Half of this period is 369 days, about 3¾ days longer than a calendar year. Hence to fit these daily stars into the tropical zodiac our ancients divided each aparent self rotation of the Sun into approximately two equal parts as 14 and 13 days. Thus starting from Aswini on 14th April having 14 days and ending Revathi also with 14 days, thereby we have 14 Natchatrams of 14 days and 13 with 13 days, 14X14+13X13= 365 days. These Natchatrams are used for starting the agricultural process each year. In northern India 7th June (Mrig) is selected for this. In Tamil Nadu August 13 (Maham ) is taken. It is understood that these Natchatrams are observed in North India even today. But in Tamilnadu such an obsevitaion is not in vague, but it finds a place in the panchangams denoted as Maha(m) karthihai, Poora(m) karthihai, Uttara(m) karthihai etc. upto Moola(m) karthihai from Avani first (August 13) to the middle of Marhazhi (Dec. 26) only.

The daily stars traced by the self rotation of the Sun in relation to the Earth have been abstracted from its stellar base and introduced into the topical zodiac, an event which occurs in 369 days is fitted into a model meant for 365 days. This is another case of approximation or rounding off.

The astrologer decides the daily star of an individual by referring to the Panchangam on the basis of the time of birth of the individual. The daily star according to the stage of self rotation of the Sun with reference to the Earth can be read from the Panchangam. Having thus decided the daily star or Natchatram, Rasi or sign is decided with reference to the table which gives the names of Natchatrams containing in each Rasi of the tropical Zodiac as explained just above. Thus the Natchatram having a stellar base is linked to a Zodiac which has no stellar relation but only a relation between the Earth and Sun. The Rasi of the individual thus decided has no reference to the real position of the Sun in relation to the tropical zodiac. Hence the zodiacal figure prepared by an astrologer is neither sidereal nor tropical. Its relation if any into celestrial bodies requires deep study.

The main body of the Panchangam is the tabular form given for each month. It contains purely astronomical data and nothing directly connected with astrology. The horoscope is written with the help of the position of the daily star as given in the Panchagam. Panchangam gives the position of the Sun with reference to the tropical zodiac, the daily star and the phase of the Moon. In addition to these the length of the day time, the daily movement of the Sun through the twelve rasis in the 60 Nazhihais or 24 hours with relation to the self rotation of the Earth. The tablar form is called Vakkiam, which word means a tabular statement in Tamil. The main contradiction in this tabular statement is that the day in which the Sun is shown to enter a particular Rasi or sign is slower by 23/24 days than the tropical Zodiac as stated earlier and it is not due to the sidereal position of the Sun, because our Punchangam and astrology do not concern themselves directly with sidereal positions. Their relation to the stellar system is only through the self rotations of the Sun with reference to the steller divisions called Natchatrams or daily stars. Therefore the reason for this shift of 23/24 days should by sought for somewhere else.

This can only be explained by the northward movement of the people of Kumarikandam. They had their capital in 'South Madurai' near or in the same latitude as that of Sumatra in the present Indonesian islands. Sumatra means Su Madurai or orignial Madurai. The equator runs through the middle of this island. The Sun is exactly above the equator during the equinoxes ie on 21/22 of March and 21/22 of September. Hence the year began on the equinox during the apparent northward journey of the Sun. After the first deluge alluded in the Sangam and other Tamil literature the capital was shifted to Kapadapuram which was situated in a latitude between 5 and 6 degrees north. It means that Kapadapuram was somewhere on the same latitude as that of Ghale in south SriLanka. The Sun takes about 24 days to be just above this point from the equinox during its northward journey. The immigrants adopted this day as the beginning of the year. Now that the names of the months in accordance with the position of the Sun in the tropical Zodiac became obsolete they named the month according to the Natchatram which is the first one in the sign where the full Moon occurs during the particular month.

On the top of the tabular form in the Panchagam for each month eg. Chithirai the name of the month is given as Mesha Ravi in addition to Chithirai. In Tamil inscrptions the months are called Mezha Gnayiru etc. (Mezham means a ram in Tamil, Gnayiru and Ravi are words of the same meaning 'the Sun' ). But inside the table against one of the days from 7to 9 a remark is made as Rishaba Ayanam, meaning "the entry of the Sun into the Rishaba Rasi" in the case of the month Chithirai which is also noted as Mesha Rasi as mintioned above. Rishabam means Bull the sign next to that of Mesham. It clearly shows that the Panchangam gives the information that the Sun enters the sign of Rishabam 23/24 days earlier than the beginning of the month by the name Rishaba Ravi or Vaihasi.

There are smaller tables in addition to the main table in the Panchangam. One table gives the daytime called 'Ahas' for very five days After the 5th a line has been allotted for one of the days 7 to 9 according the day on which the Sun enters the sign next to the one by which the month is named, eg. Rishabam sign in the month of Mesha Ravi as explained above.

In another table the period for which the Sun is in each of the 12 signs in relation with the self rotation of the Earth counted from the time of Sunrise (24 hours) is given. The total of these period is 60 Nazhihais, the length of an average day. The information given in this table is known as 'Iruppu Nazhihai' meaning the time during which the Sun stays in each of the 12 rasis in a day for that particular month. In this table eg. for the month of Chithirai or Mesha Ravi the zero point starts from Rishaba Rasi, the next of the sign by which the name of the month is called. These two tables clearly indicate that the Tamils who shifited their capital from Orginal Madurai to Kapadapuram only changed the date of the beginning of the year and thereby the beginning of each month but kept the main astronomical details intact. That is, they did not lose the tract of the tropical zodiac. But another interesting factor is noticed in the Panchangams. Panchangams are calculated for several latitudes. The difference is expressed by the names of places like Tirunelveli Panchangam, Karur Panchangam. Arkadu (Arcot) Panchangam etc. But in some of these Panchangams the tables giving the "Iruppu Nazhihai" is that pertaining to a latitude between 5 and 6°N, counted from the equator (sayanam). This is clear proof that this table was prepared with reference to a place which is 23/24 days or 5 to 6 degrees north of the equator. It was Kapadapuram mentioned in Tamil liteature and Ramayana of Valmihi.

The 23/24 day difference is present not only in India but in Europe also until 1752 A.D. England has its year starting from March 25, 4 days later than the spring eqinox. Then it was changed to December 25 and advanced by 11 days and that day was reckoned as January 1. If this advancement of 11 days and the 4 days delay in reckoning the year beginning from southern solstice, the beginning of the year before it was corrected by Pope Gregory exactly coincide with Thai Pongal or Mahara Sankaranthi. It is surprising to note that Europe which is well north of the tropic of Cancer, adopted a year beginning on a day in which the Sun is near the tropic of Capricon (Dec. 21) the southmost point of its annual journey. It is clear that when Julius Ceaser adopted this calender from Egypt, the Egyptains might have followed year beginning on 14th January ie 24 days later than the winter solstice. The calender adopted in England until 1752 must have been from a people who emigrated from Kumarikandam during the first deluge mentioned in Tamil literature in which original Madurai was situated.

The Egyptians were not indigenous is a fact accepted by all historians. They were immigrants from a far advanced culture. That culture was Kumarain which perished under the sea during several thousand years due to several deluges. There seems to be deluges before the one that has been recorded in Tamil literature as the first. There are evidences that before orignal Madurai, a Lankapuri was the capital of the Kumarians. In the Ramayana of Valmihi, the aerial path of Hanuman traced in its verses goes well south beyond the equator almost to the vicinity of present Australia to reach Lankapuri the capital of Ravana. Indian astronomers in the begning of the Christian Era adopted a meridian called Lankojjaini Mathia Rehai (meridian). The longitude of Ujjaini is 75°.43' East whereas the longitude of Clombo which is situated on the west coast of the island SriLanka is 79°-5' East. It means that the Lankojjaini Mathia Rehai has no connection with the SriLankan Island . We have to search for the Lankapuri of Ravana somewhere at the intersection of the tropic of Capricon with the lougitude 75°.43' East. The tropic of Capricon runs through Australia also. Another interesting thing is that Ujjaini lies in latitude of 23°.9' almost in the tropic of Cancer. It is evident that the Kumarians who migrated into North India through its west coast selected a place in the tropic of Capricon through which the meridian fixed at Lankapurai passes. This place has been the capital of many kingdoms before and after the beginning of the Christian Era. From this evidence it can be assumed that Kapadapuram was also in the same meridian. The reference of the Lankojjaini meridian is found in a panchangam for Tanjavoor in which the locaton of Thanjavoor is given with reference to that meridian.

The Tamils had a cultural habit of giving importance to the day on which the Sun is in the same latitude as that on which their residence lies. That is why, when they shifited their capital from original Madurai to Kapadapuram they adopted a year beginning 23/24 days later than the actal day of crossing of equator by the Sun. Later when Kapadapuram went under water they shifited their capital temporarily to Manaloor near Korkai of Thoothukudi District. The latitude of Korkai is about 8°N.To commemorated the situation of their capital once there, the people of the southern districts of Tamil Nadu give importance to the 10th day of the month Chithirai, ie 23rd April and consider this day as auspicious for sowing. Even when they constructed the palace in the present day Madurai they started the work on the day on which the shadows of the two poles of the Sun dial (Nazhihai vattil) coincided. This can happen only on the day on which the Sun is in the same latitude as that of the place. Also in many temples in Tamilnadu holes have been made in the walls or roof so that the light from the Sun falls on the deity on the day on which the Sun is in the same latitude as that of the temple. This custom is the reason for shifting 23/24 days in calculating the solstices and equinoxes in the Indian calendar and the coufusion created in the reckoning of the beginning of the year throughout the world.

The purpose of Panchangam are many more than that of tracing the seasons and astorlogy. For example during the full moon and new moon days the ailment of patients, especially those who are affected by skin, intestinal and neural diseases increases. Natural death of old and sick people mostly occur on these days. Incidence of rainfall is concentrated around these days. Daily and fortnightly ebb and low tide cycles occur in accordance with the phases of the Moon. Therefore Panchangams and horoscopes are consulted by traditional Siddha doctors for paying more attention on the patients. Some allopathy doctors also follow this procedure. The fasts and other observances are also helpful for the sick and aged people on these days.

Marainers use the compass for determining the directions. During magnetic stonms in the Sun which occurs on the day on which the vortex in the Sun faces the Earth ie on the day of Karthihai Natchatram heavily affects the position of the magnetic needle of the compass.The Panchangams might have been of tremendous use for the ancient marainers to be vigilant on such days and resort to other means for vertifying and fixing the correct directions. Now there may by doubts as to whether our ancients used marainers compass for determining the direction. There is a linguistic proof for this. Oosi is a ward to denote the north direction in Tamil. The common meaning of the word is needle. Now what is the relation between a needle and the north direction? The natural orientation of a magnetic needle is north south. Hence the direction pointed out by a magnetic needle has been named after the needle itselt.

The 60 years cycle prevalent in Tamilnadu is supposed to be based on the incidence of rainfalls, first 20 years good rainfall, second average and the third bad. This cycle had been broken by the 150 years British rule and after due to the destruction of forests. In the beginning of the previous century the cycle was reduced to 35 years as per the rainfall records maintained by British rulers. Today there is not at all any regular cycle because of the continued devastation of forests.

There are forecasts of rains in the Panchangams with reference to the position of the cusps of Moon and the positions of the planets. From these evidences it could be derived that in the beginning the Panchangams that is, the astronomical data given in them were used for forecasting the rainfall of forthcoming year and thereby the prosperity of the country. This forecasting automatically foretells the prosperity of the king in a monarchly. Thus gradually this foretelling descended on feudal chiefs, merchants and other wealthy men and finally on each and everybody and commercialization and falsehood changed the sole purpose of Panchangams. Priests on their part synchronized the birth days etc. of gods with particular positions of celestial bodies and multiplied their business opportunities. The planets and constellations themselves were made gods and special mental attributes were assigned to them and stories about the relations among these personified celestial bodies were concocted.

There is no doubt that the celestrial bodies, especially the Sun and the Moon have some influence or other on the animate and inanimate things on the Earth. They may cause certain effects on the human mind and body and the climate and environment around them. A knowledge of these influences and effects may help us to take precautionary measures. It does not mean that we need avoid Rahukalam etc. in doing our daily routine as many do. Even temples which had been the biggest indigenous industry with the biggest capital and instruments of labour does not observe these times in their daily routine. Likewise it is not necessay to avoid moon phases like Attami, Navami etc. in doing our duties and there is no meaning in each and everybody for observing fast on the so called "heavy days" like new moon karthihai etc. They are meant for old and sick people and for infants. Like the diet control advised for aged men as precaution against diabetis, hypertension etc. are being misunderstood by the youth today because of the unreasonable stress on it by the media and deprive themselves of the nutritious food required to keep them healthy. the Panchangams which give information required for the aged, sick and infants are today used for each and everybody resulting in their hesitation in carrying out their normal functions and this destructive habit has descended on the ordinary men through the parasitic elements in our society who found excuses in the Panchangams to obstain form responsibilities.

Those who believe that celestial bodies have inflluences and effects on the life of man and his environment should transform astrology into a real science. Each science have a limit for its applicaion. So also the limits of astrology should be defined clearly. The effects of different combinations of planets and constellations as given in various treatises dealing with astrology should be collected and such coclusions should be verified in the case of individuals. The astronomical meaning if any, of the position of a planet in a particular house or Rasi in an individuals horoscope should be discovered. The difference between the time taken by a planet for an orbit around the Sun, which time decides the length of time that particular planets 'resides' in each of the 12 'houses' or Rasis and the length of the 'Thasai' or 'Thisiai' period adopted for that planet as taken in the life of the individual should be understood and explained in astronomical terms, because these quantities are constant for all It is necessay to ascertain whether the daily stars in our Panchangam are really related to the respective constallions going by their name and in what manner and whether on every Karthihai day the vortex in the Sun really faces the Earth. If there is any discripancy, it should be corrected. If such discripancy is due to the movement of any particular celestial body from its previous position that displacement must be used for calculating the actual date of the appearance of our ancient astronomical science. Instead of pointing out such discripancies as proof of the unreliability of our astronomy and other traditional sciences they should be dealt with in positive and constructive manner and genuine scientific sprit.

This is a Herculian task and need the involvement of scientists of all fields in which the role to be played by the astronomer is primary and essential.

Before concluding we have to find out the reason why Pope Gregory made a change in reckoning the beginning of the year in the Christian Era. Being the religious head of the Christians be should have selected a day on which the birth day of Christ (Dec. 25) comes. This could have been done by adopting the month as followed in England until 1752, in which the first month started on March 25 or he should have taken the day on which Christ resurrected after the Crucificaion, the Easter day. Or he could have adopted Dec. 21 or March 21, which are the nodal points in the apparent north-south journey of the Sun, because it is said that in making the 'correction' he is said to have compared the date on which the spring equinox takes place. The real cause of his action seems to be that during his time many Christian missionaries arrived India mainly to South India and were able to convert many to their religion due to the socio- political situation here. (The situation is kept alive even today by our "leaders" for easy conversions by foreign agents.) They found that the new year day of the Christian Era exactly coincided with an important festival of the natives,ie., Thai Pongal or Sankaranthi. If it continued so the missionaries could not claim any superiority for their religion over that of the natives. Therefore to overcome this difficulty the pope would have made a change in the begining of the year. The reasons given for that change seems only to be an excuse. His action was not astronomical, but only religeo - political. In Tamilnadu also the Panchangams published by some individuals or families invariably carry a certificate of assurance to the effect that their Publication has been attested and sanctioned by the Sankarachari of Kanchipuram thereby showing that the Publication of Panchangams has lost its original astronomical significance and became a rligio/ political practice. It is a clear evidence that the astronomy of our ancients have fallen into the mystic world of priests and astrologers and lost is social function. In the meantime we should thank the priests and astrologers for their inadvertant preservation of this most valuable treasure of our ancients from the immeasurable past. Though they have made some additions there seems to have no omission. They have kept verything intact with reverence and piety. This reverence and piety are due to the fact that they are not able to understand the real, ie., the astronomical content of the Panchangams.

The study of the astronomy and calendar system of our ancients should result in the determination of an universal calendar system applicable throughout the world which should by established on a firm ground of astronomy and human life. This requirement can only be fulfilled by the return to our original calendar system with the year beginning on March 21/22, that is the spring equinox. It is the day from which the cycle of reproduction of almost all living begins starts. Though men have come out of such a regular cycle, the fullfilment of all there requirements depend primarily upon this cycle. Also on this day the Sun is on the center of the Earth and gives equal light to its most extreme points.

(Written in response to the Article" Vedic Astrology is not Vedic" appeared in Sunday Express dt 03-06-2001, written by Patrizia Norelli Tachallet of AEON Centre of Cosmology, Skanbha, Kodaikkanal.)